У нас вы можете посмотреть бесплатно ATA NEWS -100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தாண்டவ நடனமாடியது பார்ப்போரை வியக்க வைத்ததை,நாமும் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஆம்பூரில் ஸ்ரீ நாட்டியாலயா கலாமந்திரின் தாண்டவ தரிசனம் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தாண்டவ நடனமாடியது பார்ப்போரை வியக்க வைத்தது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் வர்த்தக மையத்தில் சிவராத்திரி தாண்டவ தரிசனம் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்பூர் ஸ்ரீ நாட்டியாலயா கலாமந்திர் நாட்டிய பள்ளி சார்பாக 15-ஆம் ஆண்டு நிருத்யாஞ்சலி விழாவை முன்னிட்டு தாண்டவ தரிசனம் - தாருகாவனம் நாட்டிய நாடக நிகழ்ச்சியை பள்ளியின் இயக்குனர் முனைவர் சந்தியா செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி ராம்ஜி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தின் இசைத் துறை தலைவர் முனைவர் மாதவி, பாட்டும் பரதமும் இதழின் ஆசிரியர் ராம்கி என்கிற இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நாட்டிய நாடக நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் நடந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிக்கு காரைக்குடி ஸ்ரீ பாலகணேஷ் பரதநாட்டியப் பள்ளியின் நிறுவனர் கணேஷ் அய்யர், இயக்குனர் ஸ்ரீபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தவமும் சாதனையும் அகங்காரமாக மாறி ஞானம் மறைக்கப்பட்ட அந்த புனித தாருகாவனத்தில் மகத்தான வெளிப்பாட்டை உலகம் எதிர்நோக்கியதை சிவன் ஆனந்த தாண்டவம் ஆடி படைத்தல், காத்தல், அழித்தல் என நாட்டியத்தின் மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறாரோ அதனை வெளிப்படுத்தும் விதமாக நாட்டிய நாடக நிகழ்ச்சியில் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட மாணவிகள் பங்கேற்று நடனமாடியது பார்ப்போரை வியக்க வைத்தது.