У нас вы можете посмотреть бесплатно ஆம் ஆத்மியை ஒழித்துக்கட்ட மோடி, அமித் ஷா கூட்டு சதி: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு | Kejriwal или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
டில்லியில் மறு தேர்தல் நடத்த மோடிக்கு தில் இருக்கா? பாஜ 10 சீட் ஜெயித்தால் அரசியலை விட்டு விலக தயார்! ஆத்மி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கைதானதை தொடர்ந்து கெஜ்ரிவால் முதல்வர் பதவியை துறந்தார். மணீஷ் சிசோடியா உட்பட பலர் கைதாகினர். இந்த வழக்கு விசாரணை டில்லி ரோஸ் வேலி கோர்ட்டில் நடந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 23க்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, வழக்கில் இருந்து அனைவரையும் விடுப்பதாக கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து, தனக்காக வாதாடி வழக்கறிஞர்கள், வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது: எனக்கும் ஆம் ஆத்மி நிர்வாகிகளுக்கும் எதிராக தொடரப்பட்ட பொய் வழக்கில், கோர்ட் இன்று நியாயத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கியுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து எனக்காக வாதாடிய வக்கீல்கள், நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிபதி உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். முதலில் இந்த வழக்கு விசாரணைக்கு உரியதே அல்ல. ஆம் ஆத்மி ஆட்சியில் டில்லி மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். டில்லியில் கால் பதிக்க முடியாத ஆத்திரத்தில் பாஜ சதித்திட்டம் தீட்டியது. மோடியும், அமித் ஷாவும் தீட்டிய சதித்திட்டத்தால், ஆம் ஆத்மி கட்சியின் 5 முக்கிய தலைவர்கள் ஒரே நேரத்தில் சிறை செல்ல நேரிட்டது. அப்போதும் அவர்களால் கெஜ்ரிவாலை வீழ்த்த முடியவில்லை. போலீஸ், வருமான வரித்துறை, சிபிஐ என அனைத்தையும் அனுப்பியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால், நான் என் வாழ்நாளில் நேர்மையையும், மரியாதையையும் மட்டுமே சம்பாதித்துள்ளேன். எனவே, என்னை கொலை செய்தால் மட்டுமே அவர்களால் என்னை வெல்ல முடியும். அதிகாரத்தை கைப்பற்றும் வெறியில் மோடியும், அமித் ஷாவும் எங்களுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டினர். கோர்ட்டில் வழக்கு நடந்த போது, நான் அமைதி காத்தேன். சிறைக்கு சென்றதால் கெஜ்ரிவால் வாயடைத்து போய்விட்டார் என்றனர். ஆனாலும் நான் அமைதி காத்தேன். கோர்ட் தீர்ப்புக்காக காத்திருந்தேன். பாஜவுக்கு நான் சவால் விடுகிறேன். டில்லியில் மீண்டும் தேர்தல் நடத்துங்கள். வெறும் 10 இடங்களில் பாஜ வென்றால் கூட நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். பாஜ தலைவர்களுக்கு அந்த தைரியம் உண்டா? இளைஞர்கள், தொழில்முனைவோர் நலனுக்காக மோடி பணியாற்ற வேண்டும். அவர் நாட்டு மக்களுக்காக வேலை செய்ய வேண்டும். சிபிஐ தொடுத்த வழக்கே முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அதன் அடிப்படையில் தொடுக்கப்பட்ட அமலாக்கத்துறை வழக்கும் இனி நிற்காது. வெறும் பார்மாலிட்டி மட்டுமே உள்ளது. அதற்கான விளக்கம் கொடுத்ததும், அந்த வழக்கும் முடிந்துவிடும். தங்களை குறி வைக்கவே பாஜ எங்களை விடுவித்துள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. நான் ஒன்று கேட்கிறேன். ஆம் ஆத்மி தலைவர்கள் சிறை சென்றனர். ராபர்ட் வாத்ராவோ, ராகுலோ, சோனியாவோ சிறை சென்றனரா? இப்படி பேச அவர்களுக்கு வெட்கமாக இல்லையா? இந்த வழக்கில் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் எதுவும் நடக்காது. விசாரணை கோர்ட்டில் ஆதாரம் சமர்ப்பிக்க முடியாதவர்கள், அப்பீல் செய்யும் போது மட்டும் எங்கிருந்து ஆதாரத்தை எடுத்து வருவர். கோர்ட் இந்த வழக்கையே ரத்து செய்துள்ளது. இது விசாரணைக்கு கூட உகந்தது அல்ல. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை நாங்கள் கூறவில்லை, கோர்ட்டே கூறியுள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.#ArvindKejriwal #DelhiPolitics #Modi #AAP #BJP #Delhi #AmitShah #KejriwalCase #ED #CBI|