У нас вы можете посмотреть бесплатно 25 07 2025 PALM TREE VISUAL3 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பனங்கிழங்கு உற்பத்தி பணியில் போச்சம்பள்ளி சுற்று வட்டார கிராம மக்கள் தீவிரம் – ஆண்டுக்கு ஒரு கோடி பனை விதைகளை தமிழக அரசு நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் பர்கூர் அடுத்த பண்டசீமனூர் ஊராட்சிக்குட்பட்ட ஈசரதாசரபள்ளி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனங்கிழங்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் இக்குடும்பத்தினர், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பனை மரங்களில் இருந்து பழுத்த பனம்பழங்களை எடுத்து வந்து பராமரிப்பு செய்து விதைத்து வருகின்றனர். கடந்த காங்களில் பனம்பழங்கள் சகஜமாக கிடைத்து வந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பெரும்பாலான பனை மரங்கள் வெட்டப்பட்ட காரணத்தால், பனம்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனையடுத்து போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளுக்கு சென்று பனம்பழங்களை விலை கொடுத்து வாங்கி, பனங்கிழங்குகளை உற்பத்தி செய்வதாக தெரிவிக்கின்றனர். ஒரு பனை மரம் ரூ.100க்கு விலை பேசி அதில் உள்ள பனம்பழங்களை டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏற்றி வந்து சுத்தம் செய்து விதைப்பதாக தெரிவிக்கின்றனர். இப்படியாக ஒரு குடும்பத்தினர் சுமார் 25 ஆயிரம் பனம்பழங்களை சேகரித்து, அதனை விதைப்புக்கு ஏற்றவாறு தயார் செய்து, ஜூலை மாதம் முழுவதும் விதைக்கப்படும். மூன்று மாதங்கள் கழித்து அக்டோபர் மாதங்களில் பனங்கிழங்கு உற்பத்தியாகிவிடும். அதனை அறுவடை செய்து, நேரடியாக வரும் வியாபாரிகளுக்கு விலைக்கு கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஈசரதாசரபள்ளி கிராமத்தில் காலம்தொற்று பனங்கிழங்கு உற்பத்தி செய்து வரும் முருகன் (55) அவர்களிடம் கேட்டபோது, 1 பனைமரம் ரூ.100க்கு விலை பேசி சுமார் 25ஆயிரம் பனம்பழங்களை எடுத்து வந்து, தனித்தனி கொட்டைகளாக பிரித்து, அவற்றை விதைப்பு செய்கிறோம். ஜூலை மாதத்தில் விதைக்கும் விதைகள், மூன்று மாதம் கழித்து அக்டோர் மாதங்களில் பனங்கிழங்குகளாக கிடைத்துவிடும். ஒரு பனங்கிழங்கு உற்பத்தி செய்ய சுமார் ரூ.1 வரை செலவு ஆகிறது. எங்களிடம் நேரடியாக வரும் வியாபாரிகள் ரூ.2 கொடுத்து வாங்கி செல்கின்றனர். காலந்தொற்று 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த தொழிலையே செய்து வருகின்றோம். கடந்த காலங்களை போல் அல்லாமல், கடந்த 5 ஆண்டுகளாகவே பனங்காய்களை கிடைப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. மேலும் எங்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலம் முழுவதும் பனை மரங்களை விதைத்துள்ளோம். அவை பலனுக்கு வர சில ஆண்டுகள் ஆகும். இருப்பினும் விவசாய நிலங்களில் உள்ள பனை மரங்களை விவசாயிகள் அகற்ற வேண்டாம், எவ்விதத்திலும் பனை மரம் விவசாயத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது என தெரிவித்தார். திப்பனூர் கிராமத்தை சேர்ந்த பனைவெள்ள சொசைடி தலைவர் காசிநாதன் அவர்களிடம் கேட்டபோது, 75 சதவீத பனை மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள பனை மரங்களில் இருந்து பனை பொருட்களை எடுத்து வருகிறோம். தமிழக அரசு பனை மரத்தை வெட்டுவது சட்டப்படி குற்றம் என அறிவித்தும், இப்பகுதிகளில் சகஜமாக பனை மரங்கள் வெட்டப்பட்டு வருவதை தமிழக அரசு தீவிரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து ஆண்டுக்கு ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.