У нас вы можете посмотреть бесплатно ஊனுக்கோர் | ஆனப்பத்து | Lord shiva song | Pavithran Kalaiselvan или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஊனுக்கோர் உயிரானாய் உயிருக்கோர் உடலானாய் வானுக்கோர் வினையானாய் வினையிற்கோர் விதியானாய் மானுக்கோர் கரமீந்து மங்கைக்கோர் புறமீந்தாய் தேனுக்குள் சுவையான தேவாரம் புகழ்வோனே. ஆசைக்கோர் பொருளானாய் ஆகாவென் றருளானாய் பூசைக்கோர் பூவானாய் பூவிற்குள் தேனானாய் ஓசைக்கோர் ஔியானாய் ஔிக்குள்ளே வெளியானாய் காசைக்கொல் கொடுந்தீயாய் காலத்துள் உறைவோனே.. இச்சைக்கோர் இயல்பானாய் இயல்பிற்கோர் திரிபானாய் எச்சைக்கும் எழுந்தானாய் எழுந்தாகி எழிலானாய் மிச்சத்துள் முழுதானாய் முழுதுள்ளே இறையானாய் உச்சத்தில் உறைவானாய் ஊரார்க்குள் நிறைவோனே.. பிச்சைக்கோர் பதியானாய் பணிவார்க்கோர் பணிவானாய் அச்சத்திற் கழிவானாய் அழியாத பொருளானாய் எச்சத்தில் உயர்வானாய் எளியார்க்கும் எளிதானாய் இச்சைதான் பெறுகின்றேன் இறைவாநீ யருள்வாயே.. அப்பன்நீ அறிவும்நீ அம்மைநீ அருளும்தீ தப்பாது எனையாளும் தந்தைநீ தாயும்நீ செப்பாதம் பதித்தேயென் சொல்லெல்லாம் நிறைவானாய் எப்போதும் இதுபோல எனைகாக்கும் சிறந்தோனே. அப்போதே பொருள்வைத்தேன் அப்பன்மேல் மனம்வைத்தேன் எப்போதோ தவம்செய்து எழுத்தாலே மலர்வைத்தேன் அப்போது பலனாகி அப்பிறப்பில் வரமாகி இப்போதும் எனக்காக இசைகின்ற பெருமானே. அத்திக்கும் தலைவன்நீ அன்பர்க்கோ விந்தைநீ சித்திக்கும் தலைவன்நீ சித்தர்க்கோ வித்தைநீ எத்திக்கும் புகழ்கின்ற தென்னாட்டார் தந்தைநீ தித்திக்கும் உளத்துக்காய் தாமுருகு சோதியனே.. சந்திரனின் பிறையேந்தி சடையோடு நதிதாங்கி செந்தீக்கோர் கரந்தந்து செழுமைக்கே ஔிதந்து கந்தற்கு சுடர்தந்து கனிவான மனங்கொண்டு சிந்தைக்கு மொழிதந்த சிறப்பான முதல்வோனே பொய்யொன்றைக் காட்டித்தான் பொய்மைக்குள் மெய்யானாய் மெய்யொன்றைக் காட்டித்தான் மெய்யார்க்குள் பொய்யானாய் மெய்யாகிப் பொய்யாகிப் பொய்மைக்குள் மெய்யானப் பொய்யாகிப் பொய்யாகி பொய்காட்டும் மெய்யோனே. செய்யாத செயலாகி செயலுள்ளும் செயலாகி வெய்யாத சுடராகி வெளியாகிப் பிறவாகி மெய்பார்க்கும் முனிவர்க்கு முழுதானப் பொருளாகி நெய்பாலுள் கலந்தார்ப்போல் நினைவுள்ளே கலந்தோனே.. #devotionalsongs #devaram #sivan #sivansongs #pathigam #bakthisongs #vela #lordmurugan #murugan #song #skanda #hindugod #muruganslogasmanthras #lordshiva #aisongs #hindudeity