У нас вы можете посмотреть бесплатно PMகிசான் நிதி போல் CMகிசான் நிதி ரூ.12,000 வழங்க வேண்டும் எனக் கேட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பி.எம் கிசான் நிதி போல் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சி.எம் கிசான் நிதியை தமிழ்நாட்டிலும் ரூ.12,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெளுங்கனந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு முன்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பாக வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளார். அவரது மகன் எ.வ.வே.கம்பன் சொல்லும் நபருக்குத்தான் வேளாண் துறை அதிகாரிகள் டிராக்டர் வழங்குவதாகவும், மேலும் திராவிட மாடல் அரசு செய்யும் ஊழலுக்கு இடதுசாரி கட்சிகள் அதனை தட்டி கேட்காமல் மறைத்து ஊழலுக்கு துணை போவதாகவும் ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் நடித்துக் காட்டினர். மேலும் மத்திய அரசு வழங்குகின்ற கிசான் திட்டத்தினால் விவசாயிகள் நாங்கள் அனைவரும் பயன் பெறுகிறோம். ஆனால் 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு 335 ரூபாய் வழங்கும் நிலையில் திராவிட மாடல அரசு வெறும் 70 ரூபாய் மட்டுமே தருகிறது. எனவே 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய 335 ரூபாயை உடனடியாக வழங்குவதோடு, 8 வார கூலியும் வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதி 33 உடனடியாக நிறைவேற்றக் கோரியும், நகைக்கடன் தள்ளுபடி செய்யாத திராவிட மாடல் அரசு வருகின்ற தேர்தலில் மண்ணைக் கவ்வும் என்றும் திராவிட மாடல அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு 125 நாளாக உயர்த்தியதற்கு வரவேற்றும் அதனை 150 நாட்களாக உயர்த்துவேன் என கூறிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு நாங்கள் ஆதரவும் நன்றியும் தெரிவிக்கிறோம் என்று தெரிவித்தனர். மத்திய அரசு பி.எம் கிசான் நிதி வருடத்திற்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்குவதுபோல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சி.எம் கிசான் நிதியை போல தமிழ்நாட்டிலும் ரூ.12,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது #KPR #Farmers #Demand #CMKISAN #pmkisan #protest #dpc #tamil #news #tiruvannamalai #tiruvannamalaidistrictnews #tamillanguage #minister