У нас вы можете посмотреть бесплатно நினைத்தகாரியம் அனைத்திலும் வெற்றிபெற விநாயகர் காரியசித்திமாலை Vinayakar KariyaSidhi Malai Chathurthi или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#vinayagar #ganesha #chathurthi #vinayagar #vinayagarkariyasidhimalai #kashyapa #kachiyappamuni #masimasam #pangunimadham இன்று சுக்ல வர #சதுர்த்தி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி உண்டாக 1முறை கேளுங்கள்! #காஷ்யபமுனிவர் அருளிய #விநாயகர் #காரியசித்திமாலை ஓம் கணபதி ஓம்! ஓம் ஓம் கணபதி ஓம்! ஓம் கணபதி ஓம்! ஓம் ஓம் கணபதி ஓம்! சரணம் சரணம் கணநாதா சங்கடஹரணே கணநாதா அபயம் தருவாய் கணநாதா ஆனைமுகனே கணநாதா பாடல் 1 : பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம். பாடல் 2 : உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன் அவ் உலகிற்பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்? உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். பாடல் 3 : இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதியை பொன் சரணம் சரணம் அடைகின்றோம். பாடல் 4 : மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். பாடல் 5 : செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம். செயல்களாகவும், செயப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப்பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்து நம்மை விடுவிப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த மெய்யான தெய்வத்தை நாம் சரணடைவோம். பாடல் 6 : வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப் போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம். பாடல் 7 : மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய் நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம் அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும், ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ, சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரணடைகின்றோம். பாடல் 8 : பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன் பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம். நூற்பயன் இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச் சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும் சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார். மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும். தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம். சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும். - Palasruthi