У нас вы можете посмотреть бесплатно தியானத்தில் தோன்றி சிந்திக்கவைத்து நடக்கவைத்து வெற்றிகரமாக முடித்துவைத்த ராகவேந்திரர் -பாதயாத்திரை15 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீ குருராஜோ விஜயதே! உலகளாவிய "ஸகல ப்ரதாதா பக்தி இயக்கம்" மகிமையுடன் வழங்கும்... "ஸ்ரீ ராகவேந்திர மகிமை 435" "தியானத்தில் தோன்றி சிந்திக்க வைத்து, நடக்க வைத்து, வெற்றிகரமாக முடித்து வைத்த ராகவேந்திரர்"- க்ரந்தாலய மந்த்ராலய பாத யாத்திரை, நாள் 15 (15.03.2025) வழக்கம்போல், பூஜை முடிந்து தியானித்தபோது ஒருநாள், இந்த க்ரந்தாலய மந்த்ராலய பாத யாத்திரை எண்ணத்தை ஸ்ரீ குருராஜர் என்னுள் தோன்றி விதைத்தபோது நான் நிறையவே இதுகுறித்துச் சிந்தித்தேன். மனம் சரியென்றாலும், வயது காரணமாக இது நடைமுறையில் சாத்தியமாகுமா என்ற எண்ணம் ஒருநொடி தோன்றினாலும், நாமா நடக்கப் போகிறோம் அவரல்லவா என்னுள் இருந்து இயக்கப் போகிறார் என்ற மனோபலம் வந்தது. அதன்படியே ஸ்ரீ குருராஜரும் வெற்றிகரமாக முடித்து வைத்தார். இந்தப் 15 ஆம் நாள் பாதயாத்திரையில் எனது மற்றும் எங்கள் குழுவினரின் நடையில் கூடுதல் துள்ளல் வேகம் இருப்பதைக் காணலாம். இவற்றையும், வழிநெடுக என் மனத்துள் புகுந்த காட்சிகளையும் காண இத்துடன் இணைத்துள்ள யூட்யூப் லிங்கைத் தொடுங்கள்! நன்றி! அன்புடன் "ஸாரஸ்வத ரத்னா " அம்மன் சத்தியநாதன்