У нас вы можете посмотреть бесплатно SIVAVAAKIYA SITHER PAADALGAL-PART 2 சிவவாக்கிய சித்தர் பாடல்கள் -பகுதி-2 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
SIVAVAAKIYA SITHER PAADALGAL-PART 2 சிவவாக்கிய சித்தர் பாடல்கள் -பகுதி-2#sither Clipchamp வாழ்க்கைக் குறிப்பு இவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன. அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி. பி. 9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் டி. எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். இவர், கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" எனக் கருதும் அறிஞர்களும் உள்ளனர். படைப்புகள் சிவவாக்கியர் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்தவர் என்பது அவர் பாடல்களில் இருந்து தெரிகிறது. இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும் (வினாக்களும்) இருக்கின்றன. இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். இவரது பாக்களில் பகுத்தறிவுக் கருத்துகளும் மிகுந்துள்ளன. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார். நாலுவேதம் ஒதுவீர் ஞானபாத அறிகிலீர் பாலுள்நெய்கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே காலன்என்று சொல்லுவீர் கனாவிலும் அதில்லையே. 17: வித்தில்லாத சம்பிரதாயம் மேலுமில்லை கீழுமில்லை தச்சில்லாத மாளிகை சமைந்தவாறெ தெங்ஙனே? பெற்ற தாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள் சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே. 18: அஞ்சுமூணு மெட்டதாம் அநாதியான மந்திரம் நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறுருச் செபிப்பிரேல் பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யுனும் பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. 19: அண்டவாசல் ஆயிரம் ப்ரசண்டவாசல் ஆயிரம் ஆறிரண்டு நூறுகோடி ஆனவாசல் ஆயிரம் இந்த வாசல் ஏழைவாசல் ஏகபோக மானவாசல் எம்பிரான் இருக்கும் வாசல் யாவர்காண வல்லரே? 20: சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும் சேமமாக வோதினும் சிவனைநீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இருப்பன் எங் கள்ஈசனே. 21: சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால் மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே. 22: தங்கம்ஒன்று ரூபம் வேறு தன்மையான வாறுபோல் செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருந்தது எம்முளே விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே எங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே. 23: அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓரெழுத்து அறிந்த கூறவல்லிரேல் அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே. 24: அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியான அஞ்சுமே பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுறீர் நெஞ்சில்அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல் அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியானது ஒன்றுமே. 25: நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர் வாழவேணு மென்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலன்ஓலை வந்தபோது கையகன்று நிற்பிரே ஆலமுண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே. 26: வீடெடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யு மாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில் ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாண் இவ்வுடலமே. 27: ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம் ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம் ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே.