У нас вы можете посмотреть бесплатно அண்ணாமலையார் கருவறையில் பின்புறம் உள்ள லிங்கோத்பவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மகா சிவராத்திரி முன்னிட்டு அண்ணாமலையார் கருவறையில் பின்புறம் உள்ள லிங்கோத்பவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை-ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். இன்று மகா சிவராத்திரி வெகு விமர்சையாக தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று இரவு முதல் வெளிமாவட்டம் மற்றும் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா என வெளி மாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளவும் கிரிவலம் வரவும் லட்ச கணக்கில் குவிந்து வாருகின்றனர். குறிப்பாக மகா சிவராத்திரியையொட்டி அண்ணாமலையார் கோவிலில் உள்ள அண்ணாமலையார் கருவறையின் பின்புறம் அமைந்துள்ள லிங்கோத்பவர் சாமிக்கு இன்று நள்ளிரவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. குறிப்பாக சிவராத்திரி பிறந்த இடம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் என்பதாலும் பிரம்மன் மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட யார் பெரியவர் என்ற அதிகார மோதலில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு யார் எனது அடி முடியை கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என ஒரு சோதனை வைத்தார். இதில் விஷ்ணு பன்றி ரூபம் எடுத்து சிவனின் பாதத்தை காணவும், பிரம்மன் அன்னபட்சி ரூபம் எடுத்து சிவனின் முடியை காணவும் சென்றனர். இதில் தோல்வி அடைந்த விஷ்ணு தனது தவறை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மன் தான் சிவனின் தலை முடியை கண்டதாக அதற்கு சாட்சியாக தாழம் பூவை சாட்சி கூற வைத்ததால் கோபம் கொண்ட சிவன் சிவன் கோயில்களில் தாழம் பூவை சிவனின் பூஜைக்கு ஏற்பது கிடையாது. ஆனால் சிவராத்திரி தினம் மட்டும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தாழம் பூவை வைத்து பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று நடைபெற்ற லிங்கோத்பவர் பூஜையில் தாழம் பூவை வைத்து பூஜை செய்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.