У нас вы можете посмотреть бесплатно நீ இல்லாமல் வாழ்வேனோ கண்ணமா(முழுநாவல்) NiviAmmu novels | tamil audio novel | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#antihero #audiobook #niviammu #love #audionovels #NiviAmmunovels #lovestory #நீ_இல்லாமல்_வாழ்வேனோ_கண்ணம்மா. #complete திரும்பும் இடம் எல்லாம் இருள். தன் முன்பு ஒரு உருவம் அமர்ந்திருப்பது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தான் ஓர் வாலிபன். முழுவதும் கருப்பு நிற உடையால் மறைத்து அந்த இருட்டில் கண்ணிற்கு கூலிங்கிளாஸ் போட்டு தூங்குபவனை பார்த்துக் கொண்டே இருந்தது. தூங்கும் வாலிபனிடம் சிறிது அசைவு தெரிந்தது. தொண்டை வற்றிபோய் தண்ணீர் குடிக்க எழுந்தான் அவன். தன் முன்னிருந்த உருவத்தை கண்டு பயந்து கத்த வாயை திறக்கும் போது பாய்ந்து வந்து அவன் குரவளையை பிடித்து அப்படியே மேலே தூக்கி ரெடியாக வைத்திருந்த டேப்பை அவன் வாயில் ஒட்டி வாய் மேலயே உதைத்தான். வாலிபன் மயங்கும் வரை அடித்து உடலில் உயிர் மட்டும் விட்டு அவனை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு தனக்காக காத்திருந்த காரில் போட்டதும் அவர்களுக்காக காரில் உடல் முழுவதும் கருப்பு உடையாள் மறைத்து காத்திருந்தவன் விருட்டென்று வண்டியை எடுத்தான். கார் முழுவதும் அமைதி மட்டுமே.இருவரிடமும் சிறிது பதட்டமோ, பயமோ கொஞ்சமும் இல்லை. தேர்ந்த கொலை காரர்கள் போல் இருந்தனர். பெரிய பங்களா முழுவதும் ஆட்கள் இருந்தனர். நிற்க்க இடம் இல்லை. ஆனாலும் கிடைத்த இடத்தில் அவரவர் நின்றிருந்தனர். சிலர் பேசிக்கொண்டிருந்தனர். இப்படி இவர் பேத்தி பண்ணி இருக்க கூடாது. இன்னும் இவருடைய பேரனை காணும். பேத்தி மேல உயிரே வச்சி இருந்தாரு. அந்த பொண்ணு இப்படி எல்லாருடைய மானத்தையும் வாங்கிடுச்சி. அவருடைய பேரனுக்கு என்ன பதில் சொல்ல போறாரோ. அந்த பையனும் அந்த புள்ளை மேல உசுரே வச்சிருந்துச்சி. இவர்களின் பேச்சை கேட்டு நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள் கோதை. என்ன பாவம் பண்ணுனோமோ தெரியலையே என் குடும்பம் இப்படி ஆகிடுச்சு. சில பெண்கள் அவரை சமாதானம் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர்.