У нас вы можете посмотреть бесплатно வாழை கன்று நடும் முறை | How to plant a plantain tree | வாழை கன்றினைத் தேர்வு செய்வது? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வாழை கன்று நடும் முறை: #எந்தமண்வகைவாழைபயிரிடஏற்றது #மலைப்பகுதிகளில்பயிரிடஏற்றஇரகங்கள்யாவை நல்ல வடிகால் வசதியும், போதிய பாசனமும் கொண்ட மண்ணில் வாழை சாகுபடி செய்யலாம். ரொபஸ்டா, நேந்திரன், குட்டை கேவன்டிஸ் போன்றவை ஜனவரி – பிப்ரவரி மற்றும் நவம்பர் – டிசம்பர் பயிரிட ஏற்றவை. சேற்று நிலங்களில் பிப்ரவரி – ஏப்ரல், பூவன், இரஸ்தாளி, மொந்தன், நெய் பூவன், கற்பூரவள்ளி மற்றும் ஏப்ரல் – மே, நேந்திரன் மற்றும் ரொபஸ்டா. தோட்டநிலங்கள் : ஜனவரி – பிப்ரவரி மற்றும் நவம்பர் – டிசம்பர் படுகை நிலங்கள் : ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் மலைப்பகுதிகள் : ஏப்ரல் – மே (கீழ் பழனி மலைகள்), ஜீன் – ஆகஸ்ட் (சிறு மலை) சாதாரண முறையில் நடுவதற்கு பக்கக் கன்றுகள் அல்லது கிழங்கு தேர்ந்தெடுக்கப்படும். கன்றாக இருப்பின் நீண்ட, குறுகிய இலைகள் மற்றும் 1.5 – 2 கி.கி எடை கொண்ட 3 – 4 மாத வயதுடைய ஈட்டி இலை கன்றினைத் தேர்வு செய்யவும். கிழங்காக இருப்பின் அனைத்தும் ஒரே சீரான அளவில், நோய்த் தாக்கமற்ற ஆரோக்கியமான தாய் மரத்திலிருந்து பெறப்பட வேண்டும். தற்போது திசு வளர்ப்பு வாழைகள் நோய்த்தாக்குதலற்றும், அதிக மகசூல் தருவதாகவும் இருப்பதால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நல்ல திசு வளர்ப்பு வாழையானது 30 செ.மீ உயரமும், 5-6 நன்கு வளர்ந்த இலைகளுடன் இருக்க வேண்டும். இலைகள் உருமாற்றம் அடையாமலும், வெளிறியக் கோடுகளோ இருத்தல் கூடாது. வாழை மிகக் குறைவானது முதல் மிக அதிகமான ஊட்டச்சத்து உள்ள மண்ணிலும் வளரும் சாகுபடி செய்ய தொடங்கும் முன் மண்ணை ஆய்வு செய்ய வேண்டும் மண் நல்ல வடிகால் வசதியுடன், போதுமான வளத்துடன், ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நன்கு நீர் வடியாத, காற்றோட்டம் இல்லாத, ஊட்டச்சத்துக் குறைந்த மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. களிமண், மணல் கலந்த மண், களர் மற்றும் உவர் நிலங்களில் வாழையை சாகுபடி செய்ய முடியாது. நீர் வடியாத அதிக கரிசல் மண், அதிக மணல் கலந்த மண், மேடு பள்ளங்களில் சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். மண் அதிக அமிலத்தன்மையுடன் அல்லது அதிகக் காரத் தன்மையுடனோ இருக்கக் கூடாது. அதிக தழைச் சத்துடன் அதிக அங்ககப் பொருளுடன் இருக்க வேண்டும். போதுமான மணிச்சத்தும், அதிகமான சாம்பல் சத்தும் உள்ள மண் சாகுபடி செய்யத் தேவை. இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவையில்லை. லேசாக மண்ணைப் பறித்து, அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டுப் பின் மண் அணைக்க வேண்டும். #வாழைகன்றுநடும்முறை #Howtoplantaplantaintree