У нас вы можете посмотреть бесплатно பெண்ணை ஏரிக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம்: 3 பேர் அட்டூழியம் | women Harassment | Crime News или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership பெட்டிக்கடை நடத்தும் பெண்ணை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை சிகரெட் வாங்க வந்த 3 ஆசாமிகள் வெறிச்செயல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பெண்ணுக்கு 42 வயதாகிறது. அவருக்கு 18 வயதிலேயே திருமணமாகி விட்டது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் அந்த பெண்ணை கணவன் பிரிந்து சென்று விட்டார். இதனால் பிழைப்புக்காக அதே பகுதியில் ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில் பெட்டிக்கடை நடத்தி 2 பிள்ளைகளையும் பெண் வளர்த்தார். 2 பிள்ளைகளுக்கும் 20 வயது நிரம்பியதும் திருமணம் செய்து வைத்து விட்டார். இப்போது, 40 வயதை கடந்த நிலையில், பெட்டிக்கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பெண் வாழ்ந்து வந்தார். பெட்டிக்கடையை ஒட்டி உள்ள ஒரு சின்ன குடிசையிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் பெட்டிக்கடையில் விபாயாரம் செய்து கொண்டிருந்தார் அந்த பெண். அப்போது, 3 ஆசாமிகள் அங்கு வந்தனர். சிகரெட், சிப்ஸ், வாட்டர் பாட்டல் வாங்கி விட்டு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, 3 பேருக்குள் இருந்த காம மிருகம் விழித்துக் கொண்டது. திடீரென பெண்ணின் வாயை பொத்தி குண்டுகட்டாக அருகிலுள்ள ஏரிக்கரைக்கு தூக்கி சென்றனர். அங்கு வைத்து 3 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து ஏரிக்கரைக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்ற உள்ளூர்காரர்கள் பெட்டிக்கடை நடத்தும் பெண் மயங்கிக் கிடப்பதை பார்த்தனர். தண்ணீர் தெளித்து என்னாச்சி என கேட்டனர். நடந்த கொடுமையை பெண் சொன்னார். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்த உள்ளூர்காரர்கள், ஆட்டோவில் பெண்ணை கவரப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பெண்ணிடம் விசாரித்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த துளசிராமனும், அவனது நண்பர்களும்தான் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதாக வாக்குமூலம் அளித்தார். துளசிராமன் வயது 20 அந்த பெண்ணின் உறவுக்காரர் ஆவார். துளசிராமனும், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் அவனது நண்பர்கள் ரஞ்சித் (27), முத்துகிருஷ்ணன் (25) ஆகியோரும் பெட்டிக்கடை பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மது குடிப்பது வழக்கம். அப்போது, தன்னந்தனியாக வசித்து வந்த பெண்ணை அனுபவிக்க வேண்டும் என ரஞ்சித்தும், முத்துகிருஷ்ணனும் கூறியுள்ளனர். அதற்கு உதவும்படி துளசிராமனிடம் கேட்டுள்ளனர். அவரும் ஒத்துக் கொண்டார். மூவரும் திட்டம் போட்டுத்தான் பெண்ணின் பெட்டிக்கடைக்கு நேற்று சென்றுள்ளனர். 10 மணியளவில் ஊரில் ஆள்நடமாட்டம் குறைந்ததும் பெண்ணின் வாயை பொத்தி ஏரிக்கரைக்கு தூக்கி சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்தது. பெண் புகாரின் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் துளசிராமன், ரஞ்சித், முத்துக்கிருஷ்ணன் மூவரையும் கைது செய்தனர். அவர்களை கும்மிடிப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.#gummidipoondi #police #crimeNews #womenHarassment