У нас вы можете посмотреть бесплатно 🙏மகா❌️சிவராத்திரியில்❤️ நகுலேஸ்வரன்🙏தேரில் வலம் வர இருக்கிறான்....🔱 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நன்கொடை English ☰ எம்மைப்பற்றி நோக்கு இலக்கு வளங்கள் சைவ சமய வரலாறு சைவ சமயத்தின் தொன்மை சிந்துவெளி நாகரிக காலச் சிவ வழிபாடு சிவாகமக்களின் தோற்றமும் வழிபாடும் வேதங்கள் கூறும் சிவ வழிபாடு திருவருட் பாடல்கள் திருவருட் பயன் சைவ சாதனைகள் திருநீரு (விபூதி) உருத்திராக்கம் சமய தீட்சை சைவ நாற்பாதங்கள் விரதங்கள் குருலிங்க சங்கம வழிபாடு சைவ சித்தாந்தம் திருவுருவ வழிபாடு திருக்கோவில் விளக்கங்கள் சைவ சித்தாந்த தத்துவம் திருமுறைகள் திருமுறைகள் வரலாறு திருமுறைகள் ஆசிரியர்கள் பன்னிரு திருமுறைகள் முதலாம் திருமுறை இரண்டாம் திருமுறை மூன்றாம் திருமுறை நான்காம் திருமுறை ஐந்தாம் திருமுறை ஆறாம் திருமுறை ஏழாம் திருமுறை எட்டாம் திருமுறை ஒன்பதாம் திருமுறை பத்தாம் திருமுறை (திரு மந்திரம்) பதினொன்றாம் திருமுறை பன்னிரெண்டாம் திருமுறை ஈழத்தில் சைவம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஈழத்து புராதன சிவாலயங்கள் திருக்கேதீச்சரம் திருக்கோணேஸ்வரம் நகுலேஸ்வரம் முன்னேச்சுவரம் கதிர்காமம் நல்லூர் கந்தசுவாமி கோவில் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் மண்டூர் கந்தசாமி கோவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் சிவன் கல்லூரி உறுப்பினர் பட்டியல் பாட அட்டவணை இணைப்புகள் திருப்பணிகள் சைவ சமய வினா விடை இணைவோம் 416 528 1407 நகுலேச்சரம் நகுலேச்சரம் அல்லது நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக நகுலேச்சரம் திகழ்கிறது. இராவணன், இலங்காபுரியை ஆட்சிசெய்த காலத்தில், இவ்வாலயம் மிகச் சிறப்பாக விளங்கியதாகக் கைலாசபுராணம் என்ற நூலிலே கூறப்பட்டுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக இது விளங்குகின்றது. அதனாலேயே உலகில் உள்ள பிரசித்தி பெற்ற ஆயிரத்தெட்டு சிவத்தலங்களுள் இதுவும் ஒன்றாக உள்ளது. காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நகுல முனிவர், இராமன், சோழவேந்தன், நளன், அருச்சுனன், மாருதப்புரவீகவல்லி, ஆதி சோழ மன்னன் முசுகுந்தன் போன்றோரால் தொழப்பெற்ற தீர்த்தத் திருத்தலம் இதுவாகும். இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலை கோயில் கொண்ட பெருமான் என்றும், திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்றும் பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றன. ஆலய வரலாறு முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் அழிந்துபோக எஞ்சியுள்ள அடிவாரமே இப்போதுள்ள கீரிமலை என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் இது எங்கேயும் உறுதி செய்யப்படவில்லை. நகுலேஸ்வரம் – ஆலய அமைப்பு புராதனப் பெருமை வாய்ந்த இத் திருத்தலத்தின் ஆலயத்தோற்றம் மிகவும் அற்புதமானது. கர்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்தமண்டபம், பரிவார தேவர் கோயில்கள், கோபுரவாயில், கோயில்பிரகாரம் என்னும் அமைப்புக்களுடன் இக்கோயில் விளங்குகின்றது. இக்கோயில் சிவாகமவிதிகளுக்கும், சிற்பசாத்திர முறைகளுக்கும் அமையவே உருவாக்கப் பட்டிருந்தது. கோயிலின் அடித்தளபீடம் வெள்ளைக் கல்லினாலான வேலைப்பாடுகளோடு காணப்பட்டது. இங்கு காணப்பட்ட அலங்கார வேலைப் பாடுகளைக் கொண்ட துண்களும், வெள்ளைக் கல்லினாலேயே அமைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் தென்குமாடத்தில் தட்சிணமூர்த்தியும், மேற்கு மாடத்தில் இலிங்கோற்பவரும் எழுந்தருளியுள்ளனர். ஆலயங்கள் கலைகளின் பிறப்பிடமாகக் காணப்பட்ட தென்பதற்குக் கீரிமலைச்சிவன் கோயில் தக்க உதாரணமாகும். இவ்வாலயத்தின் சுவர்களிலே எழில்மிகு ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. புராணக்கதைகளின் வெளிப்பாடுகளைத் தத்ரூபமாக இந்த ஓவியங்கள் சித்திரித்தன. நிருத்தமண்டபத்தின் முகப்புச்சுவரிலே, பார்வதி பரமேசுவரனின் திருக்கலியாண ஓவியம் அனைவரையும் ஈர்த்த ஓவியமாகும். நான்முகன் திருமணச் சடங்கினைச் செய்ய, திருமால் தாரை வார்த்துக்கொடுக்கும் காட்சியில் நுண்மை சிறப்பானது. இவற்றோடு முழுடுதற்கடவுளாகிய சிவனோடு தொடர்புடைய புராணக் காட்சிகளின் கைவண்ணம் சொல்லுந்தரமன்று. தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடையும்போது, ஆலகாலவிஷம் பரவியமை, திருநீலகண்டனாகிய சிவன் அதனைப் பருகி, அனைவரையும் காத்தமை, பகீரதன் தவம் புரிந்ததன் பயனாகக் கங்கை நதியானது ஆகாயத்திலிருந்து உற்பத்தியாகி, நிலவுலகிலே பாய்ந்தமை போன்றவை, சிறப்பான ஓவியங்களாகக் காணப்பட்டன. இவற்றைப் பார்வையிடுவதற்கென்றே நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் மக்கள் இங்கு வருகைதருவர்.