У нас вы можете посмотреть бесплатно VLR UNGAL KANAVAI SOLLUNGAL MAYOR MLA MP SPEECH или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வேலூர் 6-2-26 பாலாற்றில் தான் வேலூர் மாநகராட்சி குப்பைகளை கொட்டுகிறோம் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஒப்புதல் - பாதாள சாக்கடை திட்டம் குடியாத்தத்திற்கு தேவை குடியாத்தம் எம்.எல்.ஏ அமுலு கோரிக்கை - எம்.எல்.ஏ நந்தகுமாரோ செய்யும் இடத்தில் உள்ள நீங்கள் கோரிக்கை வைக்கிறீர்கள் அடுத்த தேர்தலில் நீங்கள் நிற்கும் எண்ணம் இருந்தால் பாதாள சாக்கடை திட்டத்தை கேட்காதீர்கள் குடியாத்தம் எம்.எல் ஏவுக்கு ஆலோசனை கலகலப்பு -மார்ச் மாதம் இறுதிக்குள்வேலூர் அருகே உள்ள விமான நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேச்சு வேலூர்மாவட்டம்,வேலூரில் வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம்- 2030 கருத்துகேட்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030 - உத்தி மற்றும் செயல் திட்டத்தை தயாரித்து வெளியிடவுள்ளது.. அதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் அரசு என்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற துறை சார்ந்த வல்லுநர்களின் தொலைநோக்கு பார்வையை பெற அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, தலைமையில் வேலூர் மாவட்டத் தொலைநோக்கு திட்டம்- 2030 கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது .இக்கருத்து கேட்பு கூட்டத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் 15 நபர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 15 நபர்களும், உயர்க்கல்வித்துறை சார்பில் 10 நபர்களும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 25 நபர்களும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 25 நபர்களும், என என மொத்தம் 300 நபர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா பேசுகையில் வேலூர் மாநகராட்சி குப்பைகளை குப்பை கொட்ட இடமில்லாததால் தான் பாலாற்றில் கொட்டுகிறோம் என ஒப்புதல் தெரிவித்து பேசியதுடன் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தினை செயல்படுத்த வேண்டுமென அவர் பேசினார் இக்கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் பாலாற்றில் மாநகராட்சியே குப்பையை கொட்டுகிறது என மேயர் பேசியதால் அதிர்ச்சியடைந்தனர் இக்கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு பேசுகையில் குடியாத்தம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தி மக்கள் பிரச்சணைகளை தீர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தார் இக்கூட்டத்தில் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பேசுகையில் மேயர் சுஜாதா 10 கோரிக்கையை வைத்தார் அதனை நிறைவேற்றும் இடத்தில் அவர் தான் இருக்கிறார் குப்பைகளை எரிக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் பாதாள சாக்கடை திட்டம் வேண்டுமென குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்கு கேட்டுள்ளார் அவர் அடுத்த தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை என்றால் பாதாள சாக்கடை திட்டத்தை கேளுங்கள் வேலூர் மாநகராட்சி இதுவரையில் 14 ஆண்டுகளாகிறது இன்னும் பாதாள சாக்கடை திட்டம் முடியவில்லை இதனால் மக்களிடம் கெட்ட பெயர் தான் ஏற்படும் பாதாள சாக்கடை திட்டமே வேண்டாம் என சொல்லும் எம்.எல்.ஏ நான் தான் என பேசினார் இதனால் கலகலப்பு ஏற்பட்டது இக்கூட்டத்தில் பேசிய வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேசுகையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலூர் அருகே அப்துல்லாபுரம் என்ற இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் உள்ளது இந்த விமான நிலையம் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் திறப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் பேசினார் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு துறைகளை சார்ந்த 35 வல்லுநர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.மேலும் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்