У нас вы можете посмотреть бесплатно உன்னைத் தேடும் ஒற்றன் - சுபா - A republic day special Tamil audio novel about an Indian spy's story или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இந்தக் கதை பிறந்த கதை! 1987 – 88ல், குஷ்வந்த் சிங் ஆசிரியராகக் கோலோச்சிக் கொண்டிருந்த ஆங்கில வார இதழான 'இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா' சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. கடை வாசலில் தொங்கிய ஒரு குறிப்பிட்ட வார வீக்லியின் பில் போஸ்டர் எங்கள் கவனத்தை ஈர்த்துப் பிடித்தது. ‘பாகிஸ்தானின் கொடுஞ்சிறையிலிருந்து 15 ஆண்டுகள் கழித்து விடுதலையாகி, தனது கதையைச் சொல்லும் ஒற்றன்’ என்ற வாசகத்துடன் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி இருந்ததை அறிந்ததும், உடனே வீக்லியை வாங்கினோம். ஆங்கிலக் கதைகளில் மட்டுமே ஒற்றர்கள் வலம் வந்து கொண்டிருந்த நேரம் அது. உண்மையிலேயே ஓர் ஒற்றனா? அதுவும் பாகிஸ்தான் ஜெயிலில் இருந்து வெளிவந்தவரா? கட்டுரையை கடை வாசலிலேயே படிக்கத் தொடங்கினோம். வீக்லியின் நிருபரைச் சந்தித்து, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டவர் ஓர் இந்திய ஒற்றர். பாகிஸ்தானில் உளவறிய இந்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்டு அங்கு பிடிபட்டவர். பதினைந்து ஆண்டுகள் ஜெயிலில் பல இன்னல்களைச் சந்தித்து, சித்திரவதைகளை அனுபவித்தவர். இரு நாட்டு கைதிகளையும் பரிமாற்றம் செய்துகொள்ள கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலையாகி தாய்நாடு திரும்பியவர். பதினைந்து ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக நீண்ட காலம். தன் தாய்நாட்டுக்காக ஒற்றறியச் சென்று, தன் இளமையை, தன் ஆரோக்கியத்தைச் சிறையில் தொலைத்துவிட்டு திரும்பிய அவரை இந்தியா வரவேற்றுக் கொண்டாடவில்லை. முதுமை உலகில் அடியெடுத்து வைத்திருந்த அவரை இங்கே யாருமே ஒழுங்காகக் கண்டுகொள்ளவில்லை. உளவாளியாக அனுப்பப்படுபவர்கள் ரகசியமாகத்தான் அனுப்பப்படுகிறார்கள். நம் கதாநாயகனை அனுப்பிய இந்திய அதிகாரியும் அவர் திரும்பி வருவதற்குள் இறந்து விட்டார் போலும். ஒற்றராக அனுப்பப்பட்டவர் பெயர் எந்த முறையான ஆவணத்திலும் இல்லை. எந்தப் பதிவேட்டிலும் விவரங்கள் இல்லை. "நீ யாரோ, என்னவோ.. எங்களுக்குத் தெரியாது. போனால் போகட்டும் இந்தியாவில் இருந்து கொள்.." என்று அரசாங்கம் பெரிய மனது பண்ணி அவரை இந்தியாவுக்குள் அனுமதித்தது. தன் குடும்பத்தையாவது சந்திக்கலாம் என்று சென்றவருக்கு மேலும் அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவருடைய தாய் மரித்துப் போயிருந்தாள். குடும்பம் சிதறிப் போயிருந்தது. யார் எங்கே போனார்கள் என்ற விவரங்கள் எதுவும் தெரியாமல், பிழைக்க எந்த வழியும் புலப்படாமல், 'எதற்காக, யாருக்காக நான் உயிர் வாழ வேண்டும்?' என்ற கேள்வியை நம்மைப் பார்த்துக் கேட்டார் அந்த ஒற்றர். மனம் பாரமாகி விட்டது. அந்த ஒற்றனையே கதாநாயகனாக வைத்து ஒரு கதை எழுத வேண்டும் என்ற ஆவேச உணர்வு எங்களுள் அப்போதே கிளர்ந்தெழுந்தது. இந்திய ராணுவம் பற்றியும், ஒற்றர்கள் பற்றியும் பல தகவல்களைச் சேகரித்தோம். நாங்கள் பணிபுரிந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களாக இருந்த சில ராணுவ அதிகாரிகளுடன் உரையாடினோம். பின்னணிக்குத் தேவையான விவரங்கள் கிடைத்ததும், எங்கள் நாயகனை இந்திய ஒற்றனாக உருவாக்கினோம். புதிய களத்தில் சொல்லக்கூடிய கதைக்கான கரு உதித்ததும், பேசிப்பேசி பட்டை தீட்டி, உண்மைகளும், உணர்வுகளும் குழைத்து “உன்னைத் தேடும் ஒற்றன்” நாவலை உருவாக்கினோம். ஒற்றறியச் சென்று, எதிரி ராணுவத்தினரிடம் சிக்கி, சிறையில் சித்திரவதைகள் அனுபவிக்கும் ஒற்றன் விடுதலையானானா, தாய்நாடு திரும்பினானா என்பதையெல்லாம் திட்டமிட்டு, ஓர் உசிதமான, பரபரப்பான உச்சக்கட்டத்துடன் கதையை அமைத்தோம். 1988-ல் கதை வெளிவந்ததும் அமோக வரவேற்பு பெற்றது. எங்களது மற்ற ஒற்றுக் கதைகளுக்கு 'உன்னைத் தேடும் ஒற்றன்'தான் முன்னோடி. உன்னைத் தேடும் ஒற்றனுக்குப் பிறகு நாங்கள் ராணுவ வீரர்கள், ஒற்றர்களை கதாநாயகர்களாக வைத்து எழுதிய கதைகள் எல்லாம் வெகுவாக ரசிக்கப்பட்டன. இதோ எங்களுக்கும் மிகப் பிடித்த அந்தக் கதை ராணுவ வீரர்களுக்கு நன்றியுடன் உங்களுக்காக சுபா கதைகள் சேனல் மூலம்.. With Love, சுபா 🇮🇳 Republic Day Special Tamil Audio Story Unnai Thedum Otran (உன்னைத் தேடும் ஒற்றன்) is a gripping Tamil spy audio story dedicated to the courage, sacrifice, and forgotten lives of Indian intelligence officers. Inspired by a real-life incident from the late 1980s, this powerful Tamil spy thriller follows an Indian intelligence agent who is secretly sent on a covert mission to Pakistan. Captured by enemy forces, he spends 15 brutal years inside a Pakistani prison, enduring torture, isolation, and unimaginable suffering. When he is finally released through a prisoner exchange and returns to India, he faces a harsher truth. His name does not exist in official records. His family is gone. The country he sacrificed his youth and freedom for does not recognize him. What remains is a haunting question: “Why did I survive, and for whom?” 🎧 Listen to the full Tamil audio story – Unnai Thedum Otran 🔥 Perfect for fans of Tamil audio books, Tamil spy stories, military fiction, patriotic stories, and thriller audio novels Subscribe for your weekly dose of Tamil audio stories Voiced by Krithika (Madrashe) (additional voices converted with ElevenLabs AI) Audio designed and produced by Merwin Santosh & Krithika (Madrashe) Music designed with Suno.com © All rights reserved. Copyrights owned by Writers Subha (சுபா). These rights are non-transferable and protected under applicable copyright laws. #TamilAudioStory #SubhaNovels #TamilAudiobooks #Suspense #militarynovel #patrioticstory #TamilKathai #90sNostalgia #MurderMystery #DetectiveStory #TamilStories #AudioStory #Subha #thriller #armystory #militarylife #armynovel #armylover