У нас вы можете посмотреть бесплатно திருவுந்தியார் - திருவாசகம் - வளைந்தது வில்லு விளைந்தது பூசல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#SriThiripuraBhairaviAmbikaSamed #SriBhairaveshwaraSwami #Thavathirubhairavaswamigal #Sribhairavanilayam #Bhairavartemple #kalabhairavatemple ------------------------------------------------------------------ திருவாசகம் - திருவுந்தியார் திருச்சிற்றம்பலம் வளைந்தது வில்லு விளைந்தது பூசல் உளைந்தன முப்புரம் உந்தீபற ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற. 295 ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற ஒன்றும் பெருமிகை உந்தீபற. 296 தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும் அச்சு முறிந்ததென் றுந்தீபற அழந்தன முப்புரம் உந்தீபற. 297 உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண் டெய்யவல் லானுக்கே உந்தீபற இளமுலை பங்கனென் றுந்தீபற. 298 சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள் ஓடிய வாபாடி உந்தீபற உருந்திர நாதனுக் குந்தீபற. 299 ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று சாவா திருந்தானென் று தீபற சதுர்முகன் தாதையென் றுந்தீபற. 300 வெய்யவன் அங்கி விழுங்கத்திரட்டிய கையைத் தறித்தானென் றுந்தீபற கலங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 301 பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனைப் பார்ப்பதென் னேயேடி யந்தீபற பணைமுலை பாகனுக் குந்தீபற. 302 புரந்தர னாரொரு பூங்குயி லாகி மரந்தனி லேறினார் உந்தீபற வானவர் கோனென்றே உந்தீபற. 303 வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை துஞ்சிய வாபாடி உந்தீபற தொடர்ந்த பிறப்பற உந்தீபற. 304 ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக் கூட்டிய வாபாடி உந்தீபற கொங்கை குலுங்கிநின் றுந்தீபற. 305 உண்ணப் புகுந்த பகனொளிந் தோடாமே கண்ணைப் பறித்தவா றுந்தீபற கருக்கெட நாமெல்லாம் உந்தீபற. 306 நாமகள் நாசி சிரம்மி மன்படச் சோமன் முகன் நெரித் துந்தீபற தொல்லை வினைகெட உந்தீபற. 307 நான்மறை யோனும் அகத்திய மான்படப் போம்வழி தேடுமா றுந்தீபற புரந்தரன் வேள்வியி லுந்தீபற. 308 சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற. 309 தக்கனா ரன்றே தலையிழந் தார்தக்கன் மக்களைச் சூழநின் றுந்தீபற மடிந்தது வேள்வியென் றுந்தீபற. 310 பாலக னார்க்கன்று பாற்கடல் ஈந்திட்ட கோலச் சடையற்கே யந்தீபற குமரன்தன் தாதைக்கே உந்தீபற. 311 நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை ஒல்லை யரிந்ததென் றுந்தீபற உகிரால் அரிந்ததென் றுந்தீபற. 312 தேரை நிறுத்தி மலையெடுத் தான்சிரம் ஈரைந்தும் இற்றவா றுந்தீபற இறுபதும் இற்றதென் றுந்தீபற. 313 ஏகாசமிட்ட இருடிகள் போகாமல் ஆகாசங்காவலென் றுந்தீபற அதற்கப்பாலுங் காவலென் றுந்தீபற. 314 திருச்சிற்றம்பலம் ------------------------------------------------------------------ 📍 Sri Bhairava Nilayam, kandhikuppam, Bargur (Taluk), krishnagiri (dt), Tamilnadu. 📲+919445291224 ------------------------------------------------------------------- Connect with us on social media🌐 📸Instagram : / bhairavayugam 💙Facebook : / bhairavayugam 📺Youtube : / @bhairavayugam 🧵Threads : https://www.threads.net/@bhairavayugam ---------------------------------------------------------------- #வளைந்தது_வில்லு_விளைந்தது_பூசல் #திருவாசகம் #திருவுந்தியார் #எட்டாம்_திருமுறை #மாணிக்கவாசகர் #Thirumurai #Thiruvasagam #thiruvunthiyar #ugrakalabhairavar #Bhairavayugam #sprituality #divine #devotional #devotionalchannel #devotionalvideo #kandhikuppam #krishnagiri #Bargur #Bhairavayugam #kandhikuppam_temple #kandhikuppam_kalabairavar_kovil #kandhikuppam_bhairava_temple #kandhikuppam_bhairava_kovil #kandhikuppam_kalabairavar #kandhikuppam_bairavar_temple