У нас вы можете посмотреть бесплатно Thennadudaya Periyava Potri - Ithanai Yamatrai Thevaram தேவாரம் - இத்தனை யாமாற்றை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Thevaram Ithanai Yamatra தேவாரம் - இத்தனை யாமாற்றை அருளியவர்: சுந்தர மூர்த்தி நாயனார் திருமுறை 7 -- 29 பண் : நட்டராகம் நாடு : சோழநாடு காவிரி வடகரை தலம்: குருகாவூர் வெள்ளடை Singer: Smt. Latha Sripriya Shankar @thevaramtunes8904 #thennadudayaperiyavapotri #sundaramurthynayanar #sundarar #thevaram #ithanaiyamatrai #devotional #thevaramtunes8904 #tirumurai Playlist of Thevaram songs: • Thevaram Playlists: https://youtube.com/@thevaramtunes890... Lyrics: இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 1 ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 2 பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 3 வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை அப்படி அழகாய அணிநடை மடவன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 4 வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 5 பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 6 போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான் சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே 7 மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய் சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக் கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 8 படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 9 வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன் உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 10 திருச்சிற்றம்பலம்