У нас вы можете посмотреть бесплатно தென்றலும் புயலும் l ஈழத்துத் தமிழ்த் திரைப்படம் l 12 April 1978 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தென்றலும் புயலும் திரைப்படம் ஈழத்துத் தலைநகர் திருகோணமலையில் 1978 ஆம் வருடம் முழு நீளத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதே வருடத்தில் ஆறு தமிழ்த் திரைப்படங்கள் ஈழத்தில் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். திருகோணமலை மண்ணைச் சேர்ந்த மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம் அவர்கள் தான் மேடையேற்றி வெற்றி கண்ட மேடை நாடகத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி திரைப்படமாக்கியுள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர் சண்முகப்பிரியா பாடல்களை எழுத அதே மண்ணின் மைந்தன் திருமலை. ரி. பத்மனாதன் அவர்கள் இசையமைத்துள்ளார். V. முத்தழகு, F. லோபஸ், S. கலாவதி, மற்றும் சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர். பல சிங்களத் திரைப்படங்ளிலும் சில ஈழத்துத் திரைப்படங்களிலும் பணியாற்றிய எம். ஏ. கபூர் அவர்கள் இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார். திருக்கோணேச்சர ஆலயம் திருகோணமலை கடற்கரை மற்றும் மூதூர், நிலாவெளி, உப்பாறு பகுதிகளிலும் படப்பிடிப்பு இடம்பெற்றுள்ளது. இத் திரைப்படத்தை இராஜேஸ்வரி பிலிம்ஸ் 12 ஏப்ரல் 1978 இல் இலங்கையின் பல பாகங்களிலும் திரையிட்டது. இப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி விருதை திருமதி செல்வம் பெர்னாண்டோ அவர்கள் 1978 ஆம் ஆண்டு பெற்றார். இத்திரைப்படத்தின் பிரதியை தேடிக் கையில் பெற மூன்று வருடங்கள் ஆகி விட்டது. இவ் முயற்சிக்கு உறுதுணையாக நின்ற அண்ணன் அருணன் மீனாட்சிசுந்தரம் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. #தென்றலும்_புயலும் #tamil #trincomalee #film #திருகோணமலை #Tamil_Trove #Thamo #srilankanews #தமிழ் #திரைப்படம்