У нас вы можете посмотреть бесплатно உங்களுக்கான முருகன் கோவில் எது ? | வயலூர் திருப்புகழ் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சமீபத்தில் நான் ஒரு சொற்பொழிவிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு முருக அடியாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொண்டவர். அந்த சோதனைகள் வருவதற்கு முன்பு அவருக்கு முருகப்பெருமானின் மீது பெரிய பக்தியோ அல்லது கடவுளின் மீது அதீத நம்பிக்கையோ இருந்ததில்லை. இந்த சோதனை காலகட்டத்திற்குப் பிறகு அவருக்கு முருகப்பெருமானின் மீது தீவிரமான நாட்டம் ஏற்பட்டுள்ளது. “முருகன் எனக்காக இன்னும் பல விஷயங்களை செய்ய இருக்கிறார்” என்ற உணர்வு அவருள் ஆழமாக எழுந்துள்ளது. அந்த உணர்வு அவரை ஆன்மீகப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. பின்னர் அவர் ஒரு கோவிலைக் கட்டினார். அந்த கோவிலில்தான் நான் சொற்பொழிவிற்கு சென்றிருந்தேன். அப்போது நான் அவரிடம் ஒரு உண்மையைப் பகிர்ந்தேன்! ஒருவர் ஆன்மீகத்தில் ஆழமாகச் செல்லச் செல்ல, உண்மையான தேடல் உள்ளத்தில் பெருகிக் கொண்டே போகும். அந்த தேடல் பெருகி ஒரு கட்டத்தில் இறைவன் நம்மோடு பேசத் தொடங்கும் ஒரு நிலை ஏற்படும். அந்த நிலையை அடைந்தபோது, இந்த உலகத்தில் மனிதர்கள் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்களோ அது அனைத்தும் மிகவும் அற்பமாகத் தோன்றும். மற்ற மனிதர்கள் வாழ்க்கையில் எதைப் பெரிதாக நினைத்து தேடுகின்றார்களோ, எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று நினைக்கிறார்களோ, அவை அனைத்தும் ஆன்மீகத்தின் உச்சியைத் தொட விரும்பும் ஆத்மாவிற்கு மிகச் சிறியதாகவே தோன்றும். உண்மையான ஆன்மீகத்தில் இருப்பவர்களின் குடும்பக் கடமைகள் மிகவும் சரியாக நடைபெறும். பணவரவு நன்றாக இருக்கும். புகழும் தானாக வந்து சேரும். ஒவ்வொரு இடத்திலும் இறைவனுடைய திருவிளையாடல்கள் தெளிவாக புரியத் தொடங்கும். ஒவ்வொரு நாளையும் முழுமையாக அனுபவித்து, மெய்சிலிர்த்து வாழ்வதே உண்மையான நிறைவான வாழ்க்கை. அதுவே ஆன்மீகம்! உண்மையான ஆன்மீகம் என்பது தனக்குள்ளே இருக்கும் இறைவனை தேடி கண்டடைவதே ஆகும். இவ்வாறு இறைவனை அடைந்த மிகப்பெரிய ஞானிகளுக்கு சில விஷயங்கள் தெளிவாகப் புரியும். அவர்கள் அனைவரும் பெற்ற ஆன்மீக அனுபவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் சென்றடைந்த பாதை உண்மையான மெய்ப்பாதை என்பதே அதன் அர்த்தம். அந்த உண்மையை அருணகிரிநாதர் திருப்புகழில் மிகவும் அழகாகச் சொல்கிறார். வயலூர் திருப்புகழ் 911 தானன தனத்த தானன தனத்த தானன தனத்ததனன நானா தாமரையின் மட்டு வாச மலரொத்த தாளினை நினைப்பில் அடியேனை தாதவிழ் கடுக்கை நாக மகிழ்கற்ப தாருவென மெத்திய விராமலையில் நிற்ப நீ கருதியுற்று வாவென அழைத்த என் மனதாசை மாசினை அறுத்து ஞானமும் அளித்த வாரமினி நித்தம் மறவேனே காமனை எரித்த தீநயன நெற்றி காதிய சொர்க்கநதி வேணி கானில் உறை புற்றில் ஆடு பணியிட்ட காதுடைய அப்பர் குருநாதா சோமனோடு அருக்கன் மீனுலாவு மிக்க சோலை புடை சுற்று வயலூரா சூடிய தடக்கை வேழ்க்கொடு விடுத்து சூர்தலை துணித்த பெருமாளே. முருகப்பெருமானின் தாமரை மலர் போன்ற குளிர்ந்த திருவடியை நினைக்கத் தகுதியில்லாத எனக்கு அருள் செய்தார் என்று அருணகிரிநாதர் கூறுகிறார். மகிழ் மரம், சரக்கொன்றை போன்ற விசேஷமான மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருக்கும் விராலிமலைக்கு “வா” என்று முருகப்பெருமான் அவரை அழைத்தார். சில சமயங்களில் இறைவன் நம்மை ஒரு இடத்திற்கு அழைப்பார். “அங்கே வா” என்று உள்ளுக்குள் ஒரு உணர்வு தோன்றும். ஆனால் அது இறைவனின் அழைப்பா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். அருணகிரிநாதர் இங்கே தெளிவாகச் சொல்கிறார்: “நான் அங்கே நிற்கிறேன்; அதை மனதில் வைத்து வா” என்று முருகன் அழைத்தார். அவர் சென்றபோது, மனதில் இருந்த ஆசைகளை அனைத்தையும் அழித்து அவரை சுத்தப்படுத்தினார். மனம் வெறுமையாக ஆனபின் அவருக்கு ஞானம் அளித்தார். “ஆசை அறுந்தால்தான் ஞானம் பிறக்கும்” என்ற மிகப் பெரிய உண்மையை முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு செய்து காட்டினார். பின்னர் அவர் சிவபெருமானைப் பற்றிய இரண்டு விஷயங்களைச் சொல்கிறார். ஒன்று மன்மதனை எரித்தது. மற்றொன்று கங்கை நதியை சடையில் தாங்கியது. இந்த இரண்டுக்கும் இரண்டு பெயர்கள் உள்ளன: மரக்கருணை மற்றும் அறக்கருணை. மன்மதனை எரித்தது, மரக்கருணை — தண்டித்து திருத்துவது. கங்கையை சடையில் தாங்கியது, அறக்கருணை — கருணையால் காப்பாற்றுவது. இந்த இரண்டு கருணைகளையும் கொண்ட சிவபெருமானின் மகனே என் குருநாதன் என்று அருணகிரிநாதர் கூறுகிறார். பின்னர் வயலூரைப் பற்றி கூறுகிறார். அங்கு நவகிரகங்கள் முருகப்பெருமானை பூஜித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கையில் இருந்த வேலால் சூரபத்மனை அழித்து, அவனுக்கு நல்ல நிலையை அளித்து, அவனை மயிலும் சேவலும் ஆகியவையாக மாற்றிக் கொண்ட வரலாற்றையும் குறிப்பிடுகிறார். இந்த அற்புதமான வயலூர் திருப்புகழை தினந்தோறும் பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமான் உங்கள் கனவில் வந்து எந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பதை காட்டுவார். முருகாசரணம்! #வயலூர்_திருப்புகழ் #திருப்புகழ்911 #தாமரையின்_மட்டு #அருணகிரிநாதர்_திருப்புகழ் #வயலூர்_திருப்புகழ்911 #வயலூர்_முருகன்_கோவில் #திருப்புகழ்911_விளக்கம் #விராலிமலை_முருகன் #முருகன்_அழைப்பு #முருகன்_கனவு #ஆன்மீக_அனுபவம் #ஞானம் #ஆசை_அறுந்தால்_ஞானம் #மரக்கருணை #அறக்கருணை #நவகிரக_பூஜை #முருகன்_தரிசனம் #அனைவருக்கும்_சரியான_கோவில் #எனது_கோவில் #விஜயகுமார்_வயலூர்_வீடியோ #விஜயகுமார்_வயலூர்_திருப்புகழ்_விளக்கம் #விஜயகுமார்_ஆன்மீக_சொற்பொழிவு #VayalurThirupugazh #Thirupugazh911 #ThamaraiyinMattu #ArunagirinatharThirupugazh #VayalurMuruganTemple #Viralimalai #ViralimalaiMurugan #MuruganCalling #Thirupugazh911Explanation #MuruganInDreams #DivineWisdom #DesireAndWisdom #Marakkarunai #Arakkarunai #NavagrahaWorship #MuruganDarshan #RightTemple #MuruganFaithSearch #FindingYourTemple #Thirupugazh911Teachings #VijayakumarVayalurVideo #VijayakumarVayalurThirupugazhExplanation #VijayakumarSpritualSpeech