У нас вы можете посмотреть бесплатно நெல்லையில் அசாம் பெண் கூட்டு பலாத்காரம்-அதிர்ச்சி | tirunelvel assam woman case | srivaikuntam crime или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரி, செங்கல் சூளைகளில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்கின்றனர். இவர்களை செங்கல் சூளை மற்றும் குவாரிகளில் சேர்த்து விட பல இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர். அந்த வகையில் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் செயல்படும் கல்குவாரியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம் தம்பதியை முகமது மஹ்புல் ஹுசைன் வயது 27 என்பவர் வேலைக்கு சேர்த்து விட்டார். முகமது மஹ்புல்லும் அசாமை சேர்ந்தவர் தான். ஆனால் திருநெல்வேலி நகரில் வசித்து வருகிறார். அசாம் தம்பதியை வேலைக்கு சேர்த்து விட்டதற்காக குவாரி ஓனரிடம் இருந்து அவருக்கு கமிஷன் தொகை கைமாறியது. வேலைக்கு சேர்ந்த இடத்தில் போதிய வசதிகள் இல்லை. இதனால் குவாரி வேலையில் இருந்து விலகி, கேரளாவுக்கு வேலைக்கு செல்ல தம்பதி முடிவு செய்தனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு போன் செய்த முகமது மஹ்புல், இங்கே தான் வேலை செய்ய வேண்டும் என்று மிரட்டினார். இது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி உள்ளார். சிவந்திபட்டி பகுதிக்கு 2 சிறுவர்களுடன் அவர் பைக்கில் வந்து நின்றார். சிறிது நேரத்தில் ஆட்டோ வந்தது. தம்பதியை கீழே இறக்கி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பக்கத்தில் உள்ள காட்டு பகுதிக்கு முகமது மஹ்புல்லும், கூட வந்த சிறுவர்களும் அழைத்து சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும், கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர் கண் முன்னே மனைவியை ஒருவர் பின் ஒருவராக பலாத்காரம் செய்தனர். சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். பல மணி நேரம் கழித்து 2 பேரையும் ரோடு பகுதியில் கொண்டு வந்து விட்டனர். பின்னர் கூட்டு பாலியல் செய்த மூவரும் தப்பி சென்றனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அசாம் தம்பதி கதறியது. அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். பலத்த காயங்களுடன் அவதிப்பட்ட அசாம் பெண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொடூரன்கள் முகமது மஹ்புல் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. #TirunelvelAssamWomanCase #SrivaikuntamCrime #JusticeForWomen #CrimeAwareness #SocialJustice #LegalAction #WomenEmpowerment #CriminalJustice #DomesticViolence #RightsForWomen #SafetyForAll #CommunitySupport #StopTheViolence #GenderEquality #LawAndOrder #EmpowerTheVoiceless #HumanRights #AwarenessMatters #SpeakOutAgainstCrime # #TirunelvelAssamWomanCase #SrivaikuntamCrime #JusticeForWomen #CrimeAwareness #SocialJustice #LegalAction #WomenEmpowerment #CriminalJustice #DomesticViolence #RightsForWomen #SafetyForAll #