У нас вы можете посмотреть бесплатно How to take action against police officers who make illegal arrest? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Superme Court Shri D.K. Basu,Ashok K. Johri vs State Of West Bengal,State Of U.P on 18 December, 1996 Bench: Kuldip Singh, A.S. Anand PETITIONER: SHRI D.K. BASU,ASHOK K. JOHRI Vs. STATE OF WEST BENGAL,STATE OF U.P WITH WRIT PETITION (CRL) NO. 592 OF 1987 1. ஒருவரை கைது செய்யும்போது அது தொடர்புடைய வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி தங்களது பெயர் பொறிக்கப்பட்ட பட்டையைத் தெளிவாகத் தெரியும் வகையில் சீருடை அணிந்திருக்க வேண்டும். யார் விசாரணை அதிகாரி என்பது காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும். 2. கைது செய்யும்போது அது குறித்த மெமோவை தயார் செய்ய வேண்டும். அதில் கைது நடந்த நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனை கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினரோ, அல்லது அந்தப் பகுதியின் பெரிய மனிதர் ஒருவரோ ஏற்று ஒப்புதல் சாட்சியமளித்து கையெழுத்திட வேண்டும். கைது செய்யப்பட்டவரும் அதில் கையெழுத்திட வேண்டும். 3. கைது செய்யப்பட்ட அல்லது பிடித்துச் செல்லப்பட்ட அல்லது விசாரிக்கப்படும் நபரின் உறவினர், நண்பர், நலம் விரும்பி ஆகிய யாராவது ஒருவருக்கு முடிந்த அளவு விரைவாகத் தகவல் சொல்ல வேண்டும். எந்த இடத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும். குடும்ப உறுப்பினரே சாட்சியமளித்து கையெழுத்திட்டால் இதைச் செய்யத் தேவையில்லை. 4. கைது செய்யப்பட்டவரின் உறவினரோ நண்பரோ மாவட்டத்திற்கு வெளியில் வசித்தால் கைது செய்யப்பட்ட இடம், நேரம் குறித்த தகவல்களை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்ட சட்ட உதவி ஆணையமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் தந்தி மூலம் இதனைச் செய்ய வேண்டும். 5. ஒரு நபர் கைது செய்யப்பட்டவுடன், அதனை யாருக்காவது தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்ட நபருக்கு இருக்கிறது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும். 6. கைது செய்யப்பட்ட காவல் நிலைய நாட் குறிப்பில் கைது குறித்தும் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த காவல் அதிகாரியின் பிடியில் அந்த நபர் இருக்கிறார் என்பது குறித்தும் பதிவு செய்ய வேண்டும். 7. கைது செய்யப்படும் நபர் தன்னை பரிசோதிக்க வேண்டுமென கோரலாம். ஏதேனும் காயங்கள் இருந்தால் அவை பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சோதனை ஆவணம் கைது செய்யப்பட்ட நபராலும் கைதுசெய்யும் காவல்துறை அதிகாரியாலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதன் பிரதி கைதுசெய்யப்பட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டும். 8. கைது செய்யப்பட்ட நபருக்கு 48 மணி நேரத்திற்குள் தகுதி வாய்ந்த மருத்துவரால் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலத்தின் மருத்துவ சேவை இயக்குநரகத்தால் சான்றளிக்கப்பட்ட மருத்துவரே இந்த சோதனையைச் செய்ய வேண்டும். 9. கைது ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் அந்தப் பகுதியின் மாஜிஸ்ட்ரேட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். 10. விசாரணையின்போது தனது வழக்கறிஞரைச் சந்திக்க கைது செய்யப்பட்டவருக்கு உரிமை உண்டு. ஆனால், முழு நேரமும் இருக்க வேண்டியதில்லை. 11. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில தலைமையகத்திலும் இதற்கென ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். இந்த கைது, அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்களை அங்கே அனுப்ப வேண்டும். கைது நடந்து 12 மணி நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும். ....................................................................... Supreme Court of India Arnesh Kumar vs State Of Bihar & Anr on 2 July, 2014 Bench: Chandramauli Kr. Prasad, Pinaki Chandra Ghose CRIMINAL APPEAL NO. 1277 OF 2014 (@SPECIAL LEAVE PETITION (CRL.) No.9127 of 2013) இத்தீர்ப்பின்படி ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வழக்கின் விசாரணைக் கைதிகளை சிறையில் அடைக்காமல் காவல் நிலைய பிணையில் விட வேண்டும். கைது செய்தே ஆக வேண்டும் என்றால் அதற்கான காரணம் கூறி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். Dr. Rini Johar & Another v. State of M.P. & Ors. AIR 2016 SC 2679/(2016) 11 SCC கிரிமினல் வழக்குகளில் 7 வருடங்களுக்கு குறைவாகவும் அல்லது 7 வருடம் வரை தண்டனையளிக்கக்கூடிய குற்ற செயல் தொடர்பாக வரும் புகார்களுக்கு கைது நடவடிக்கைகள் அவசியமில்லை என சி.ஆர்.பிசி 1973 பிரிவு 41 மற்றும் 41 A சொல்லப்பட்டுள்ளது.இந்த வழக்கில் Case Citation ஆக DK Basu Vs State of West Bengal -1997 வழக்கை எடுக்கும்போது 7 வருடங்களுக்குள் உள்ள குற்றங்களுக்கு கைது நடவடிக்கைகள் தவிர்க்க வேண்டுமெனவும் ,காவல்துறை கண்டிபாக சி.ஆர்.பி.சி 1973 சட்டப்பிரிவு 41 & 41 A வை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியது அதோடு இந்த வழக்கில் கைது செய்வதற்குரிய Guidelines யை வரையறுத்து அனைத்து காவல் நிலையங்களும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டது. இதே மாதிரி Arnesh Kumar Vs State of Bihar -2014 இந்த வழக்கில் 41-A வை பின்பற்ற கோர்ட் அறிவுறுத்தியது. மேற்படி Dr. Rini Johar & Another v. State of M.P. & Ors இந்த வழக்கில் 7 வருடங்கள் குறைவாக தண்டனை உள்ள வழக்கில் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் இரண்டு நபர்களில் ஒரிவர் மருத்துவர் மற்றொருவர் வழக்கறிஞர்.இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 21 யில் அளிக்கப்பட்டுள்ள Personnel Liberty என்பது Violation ஆகியுள்ளது.இதோடு இவர்கள் கைது செய்யபட தேவையான காரணம் ஏதுமில்லை, மாறாக சி.ஆர்.பி.சி 1973 சட்டப்பிரிவு 41 & 41 A இவ்வழக்கில் Violative ஆகியுள்ளதால் ,இதனால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. Telugana high Court Jakka Vinod Kumar Reddy v. Mr. A. R. Srinivas and 3 others Violation Of SC Guideline On Arrest- Telangana High Court Sentences IPS Officer And 3 Police Officers To Four Weeks Imprisonment For Contempt