У нас вы можете посмотреть бесплатно ரிட் மனு என்றால் என்ன?|wirtten order||இதில் ஐந்து வகைகள் உண்டு||Common Man|| или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Common_Man ரிட் மனு என்பது என்ன? நீதிமன்றத்திடமிருந்து எழுத்து பூர்வமாக உத்தரவைப் பெறுவதையே ரிட்டன் ஆர்டர் என்கிறோம். இதன் சுருக்கமே `ரிட்' என்றழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 226-ன்படி உயர் நீதிமன்றத்திலும், ஷரத்து 32-ன்படி உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். ரிட் மனுக்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. ரிட் ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus), 2. ரிட் மாண்டமஸ் (Mandamus), 3. ரிட் செர்ஷியோரரி (Certiorari), 4. ரிட் புரபிசன் (Prohibition), 5. ரிட் கோவாரண்டோ (Quo-Warranto). 1️⃣ ரிட் ஹேபியஸ் கார்பஸ் இதையே `ஆட்கொணர்வு மனு' என்கிறோம். சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட அல்லது அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒருவரை அல்லது காணாமல் போன ஒருவரை நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர (You may have the body) தாக்கல் செய்யும் மனு `ரிட் ஹேபியஸ் கார்பஸ்' எனப்படுகிறது. எந்தத் தவறும் செய்யாத ஒருவரை, காவல்துறையினர் அத்துமீறி கைது செய்திருந்தால், கைது செய்யப்பட்டவரின் நிலையை அறிந்துகொள்ள/ அல்லது சட்ட விரோதமான கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள/, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றமற்ற வரை விடுவிக்க/ கைதானவரின் உறவுகள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம். தகுந்த காரணமோ அல்லது ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும்போது, அவற்றை விசாரித்து நியாயமான காரணம் இருந்தால் மட்டும் ஆட்கொணர்வு மனு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும்; சட்டத்துக்குப் புறம்பான, போதிய காரணமற்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படுவதும் உண்டு. நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான ஏற்பும் மற்றும் விசாரணையும் அதே நாளில் நடைபெறும். 2️⃣ ரிட் மாண்டமஸ் அரசாங்கம், அரசு ஊழியர்கள், கீழமை நீதிமன்றங்கள், ஆணையங்கள், கார்ப்பரேஷன் ஆகியோர் கடமையைச் செய்ய மறுத்தால் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் ரிட் மாண்டமஸ் மனு, தாக்கல் செய்யலாம். கடமையைச் செய்யத் தவறிய அமைப்புக்கு கடமையைச் செய்யும்படி உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் கட்டளை ஆணை பிறப்பிக்கும். 3️⃣ ரிட் செர்ஷியோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விசாரணைகள் முடிந்த பிறகு நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பானது அதிகார வரம்பை மீறியது அல்லது சட்டத்துக்குப் புறம்பானது என்று கருதினாலோ... உண்மைக்குப் புறம்பாக அல்லது இயற்கைக்கு மாறாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் என்றாலோ கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய உத்தரவிடும்படி மனு கொடுக்கலாம். இதுவே ரிட் செர்ஷியோரி ஆகும். 4️⃣ ரிட் புரபிசன் கீழ் நீதிமன்றமோ அல்லது அரசு அலுவலரோ, தம் அதிகாரங்களுக்கு அப்பால் செயல்படுவதை நிறுத்துவதற்காக பிறப்பிக்கப்படும் தடை ஆணை ப்ரோகிபிஷன் ரிட் (இடைக்காலத் தடுப்பாணை) ஆகும். 5️⃣ ரிட் கோவாரண்டோ எத்தகைய உச்ச பதவியை வகிப்பவர்களாக இருந்தாலும், "எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் அந்தப் பதவியை வகிக்கிறார்?" என்று கேள்வி கேட்கும் உரிமை மற்றவர்களுக்கு உண்டு. எந்த ஒரு அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அல்லது தனது பதவியின் அதிகார வரம்பை மீறி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்தாலோ, அதனை எதிர்த்து போடப்படுவது கோவாரண்டோ மனுவாகும்.