У нас вы можете посмотреть бесплатно திருச்சி ஸ்ரீரங்கத்தில் பகுதி செயலாளர் ராம்குமார், மணி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருச்சி - 13.02.26 *கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹.5000 வரவு வைப்பு - திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுகவினர், பெண்கள் வெடி வெடித்து கொண்டாட்டம். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’’மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு வைக்கப்படும்’’ என அறிவித்துள்ளார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்றே அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சியினர் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கட்சிகள் போட்டிபோட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ள அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பெண்கள் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கு கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் பகுதி செயலாளர் ராம்குமார், மற்றும் பகுதி செயலாளர் எம்.எஸ்.மணி தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திமுக கவுன்சிலர்கள் , நிர்வாகிகள், அப்பகுதி பெண்கள் திரளாக கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். #trichymalar24x7 #trichylocalnews #trichynews #dmk