У нас вы можете посмотреть бесплатно திருவாசகம்-ஸ்ரீரமண சந்நிதி முறை-Class 17 dt 10 02 26 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஸ்ரீ ரமண சந்நிதி முறையின் தனிப்பெருஞ்சிறப்பு அருணைசிவமே மனிதவுருக்கொண்டு நம்மிடையே நடமாடிய பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது ஸ்ரீ ரமண சந்நிதி முறை. இதை அருளிய ஸ்ரீ முருகனார் சுவாமிகள் மணிவாசகரின் மறுவுருவெனப் போற்றப்படுவராவார். பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தைத் தவிர்த்து ஏனைய திருமுறைகளை தழுவி எழுந்த மாபெரும் ரமண காவியம் ஸ்ரீ ரமண சந்நதி முறை! பொதுவாக ஸ்ரீரமண சந்நிதி முறை என்றால் அது திருவாசகத்தின் மறுபதிப்பு என்று நினைவுகூரப்படுகிறது. திருவாசகத்திலுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் ஸ்ரீமுருகனார் பதிகங்களை இயற்றியிருப்பதால் இதில் சரியே. இது ஒரு பக்கம் இருக்க, எட்டாம் திருமுறையாம் திருவாசகத்தில் மட்டுமின்றி ஸ்ரீமுருகனார் ஏனைய பத்து திருமுறைகளிலிருந்தும், ஒன்றையும் தவறவிடாமல் பதிகங்களை பாடியுள்ளது மறு பக்கமாக விளங்குகின்றது. மேலும் அருணகிரியாரின் கந்தரனுபூதி, தாயுமானவ சுவாமிகளின் கண்ணிகள், சங்க இலக்கிய நூல் பரிபாடல், வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஆதார நூலாகிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார், குலசேகராழ்வார் ஆகியவர் அருளிய பாசுரங்கள் ஆகியவற்றைத் தழுவி உருவாக்கப்பட்ட பாடல்களையும் உள்ளடக்கியது ஸ்ரீ ரமண சந்நிதி முறை! இத்தகைய அரிதினும் அரிய போற்றுதல்களுக்கு இந்நூல் உள்ளாவதற்குக்குரிய காரணங்களில் இந்நூலின் பிரமிக்கத்தக்க நூல் அமைப்பும் ஒன்றாகும்! ஓளவை மூதாட்டியார் அருளிய ஆத்திச்சூடியைத் தழுவி மகாகவி பாரதி “புதிய ஆத்திச்சூடி’ ஒன்று உருவாக்கியதைப்போல், ஸ்ரீ முகவைக் கண்ண முருகனார் சுவாமிகள் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு “புதிய திருமுறை’யை சங்கத் தமிழ் நடையில் உருவாக்கியுள்ளார். எனவே இந்நூலிற்குப் “புதிய திருமுறை’ என்னும் தலைப்பு தெரிந்திடப்பட்டுள்ளது. பழங்கதை வேசுவதில் பயனில்லை என்கிறார் மகாகவி! அதை மெய்ப்பிக்கும் வகையில், சங்கத் தமிழ் இலக்கியம் ஒரு பழங்கதை அல்லவென்று நிரூபிப்பது இந்த “புதிய திருமுறை’ ! சங்கத் தமிழை மீட்டுக் கொடுத்த தமிழ்த் தாத்தா.உ.வே. சா. இந்த நூலை “இருபதாம் நூற்றாண்டின் சங்கத் தமிழ்’ என்றும், மூல நூலாசிரியர் ஸ்ரீ முருகனார் சுவாமிகளை “இருபதாம் நூற்Ùண்டின் சங்கத் தமிழ்ப் புலவர்’ என்றும் புகழ்ந்திருப்பது இதற்குத் தக்க சான்றாகும்! ஆகவே சங்கத் தமிழ் ஸ்ரீ முருகனார் சுவாமிகள் வடிவில் இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் நம்மிடையே நடமாடியதென்பது தமிழ் சமுதாயம் பெருமைபடவேண்டிய ஒன்றாகும்! அன்புடன், "முகவைக் கண்ண முருகனடிமை' K.ஸ்ரீராம்.