У нас вы можете посмотреть бесплатно பொன்செய்த மேனியினீர் | சனிக்கிழமை அன்று இழந்த பொருளை மீண்டும் பெற மந்திரம் சிவன் பக்தி பாடல்கள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#thiruchitrambalam #pathigam #bhakti #tamilbhakthisongs #Siva #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional #saturday #thirunallar பொன்செய்த மேனியினீர் | இழந்த பொருளை மீண்டும் பெற மந்திரம் சிவன் பக்தி பாடல் | தேவாரம் பதிகம் திருச்சிற்றம்பலம் அ௫ளியவர் : சுந்தரர் திருமுறை : ஏழாம்-திருமுறை பண் : நட்டராகம் நாடு :நடுநாடு தலம் : முதுகுன்றம் சுவாமி : விருத்தகிரீஸ்வரர்; அம்பாள் : விருத்தாம்பிகை. பாடியவர்: சற்குருநாத ஓதுவார் பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர் முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர் மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியேனிட் டளங்கெடவே. 1 உம்பரும் வானவரும் உடனேநிற்க வேயெனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர் வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள் எம்பெரு மானருளீர் அடியேனிட் டளங்கெடவே. 2 பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே அத்தா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. 3 மங்கையோர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர் திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர் கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே அங்கண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே. 4 மையா ரும்மிடற்றாய் மருவார்புரம் மூன்றெரித்த செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய் பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள் ஐயா தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. 5 நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும் முடியால் வந்திறைஞ்ச முதுகுன்ற மமர்ந்தவனே படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே அடிகேள் *தந்தருளீர் அடியேனிட் டளங்கெடவே. (* தந்தருளாய் என்றும் பாடம்) 6 கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல் வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய் பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே அந்தண னேயருளாய் அடியேனிட் டளங்கெடவே. 7 பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே அரசே தந்தருளாய் அடியேனிட் டளங்கெடவே. 8 ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே மூத்தாய் உலகுக்கெல்லாம் முதுகுன்ற மமர்ந்தவனே பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடியேனிட் டளங்கெடவே. 9 பிறையா ருஞ்சடையெம் பெருமான் அருளாயென்று முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே. 10 Other Songs: குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum: • குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு ... திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam: • திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில்... ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam : • ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல... திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam • நோய் நீங்கும் மந்திரம் திருநீற்றுப் பதிகம... Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos / @shivaarpanam