У нас вы можете посмотреть бесплатно திருக்கச்சூர் ஆலக்கோயில் பதிகம் முதுவாய் ஓரி கதற Thirukachur sundarar thevaram Kachabeswarar தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
7 41 சிவசிவ *திருச்சிற்றம்பலம் தலம்:- திருக்கச்சூர் ஆலக்கோயில் சுந்தரர் பெருமான் அருளிய திருபாட்டு ஏழாவது திருமுறை பதிகம் எண்- 41 *பண்- கொல்லிக் கௌவாணம் பாடல் எண் : 1 முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே அதுவே யாமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 2 கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் கழலுஞ் சிலம்புங் கலிக்கப் பலிக்கென் றுச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரே இச்சை யறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய் அச்சம் மில்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 3 சாலக் கோயில் உளநின் கோயில் அவைஎன் தலைமேற் கொண்டாடி மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் வானோ ரறியா நெறியானே கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர்பூங் கச்சூர் வடபாலை ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் அறங்க ளுரைத்த அம்மானே பாடல் எண் : 4 விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னேர் உருவத் தொளியானே கடையும் புடைசூழ் மணிமண் டபமுங் கன்னி மாடங் கலந்தெங்கும் புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் பூமேல் திருமா மகள்புல்கி அடையுங் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 5 மேலை விதியே விதியின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய் காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா மாலை மதியே மலைமேல் மருந்தே மறவே னடியேன் வயல்சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 6 பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்ற மேறிப் பேய்சூழ்தல் துறவாய் மறவாய் சுடுகா டென்றும் இடமாக் கொண்டு நடமாடி ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே அறவே யொழியாய் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 7 பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானே மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவா ரவரை நினைகண்டாய் மையார் தடங்கண் மடந்தை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்த ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 8 ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன் கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய் மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 9 காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனையேத்தி ஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்ளல் அழகிதே ஓதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனையாள்வாய் ஆதற் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே. பாடல் எண் : 10 அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானை உன்ன முன்னு மனத்தா ரூரன் ஆரூ ரன்பேர் முடிவைத்த மன்னு புலவன் வயல்நா வலர்கோன் செஞ்சொல் நாவன் வன்றொண்டன் பன்னு தமிழ்நூல் மாலை வல்லா ரவர்என் தலைமேற் பயில்வாரே. அருள்தரும் அம்மை உமையம்மை உடனுறை அருள்மிகு விருந்திட்டநாதர் திருமலரடிகள் *போற்றி போற்றி #KachabeswararTemple #Thirukachur #திருக்கச்சூர் #கச்சபேஸ்வரர்கோயில் #விருத்திட்டஈஸ்வரர் #சுந்தரர்பாடல் #திருக்கச்சூர்ஆலக்கோயில் #முதுவாய்ஓரிகதற #Tirukkachur #Kachabeswarar #Marundeeswarar #மருந்தீசர் #மருந்தீஸ்வரர் #சுந்தரர்பெருமான் #சுந்தரர் #சுந்தரமூர்த்திநாயனார் #சுந்தரர்சுவாமி #நம்பியாரூரர் #தம்பிரான்தோழர் #ஆளுடையநம்பிகள் #Sundarar #சுந்தரமூர்த்தி #Chuntarar #Chuntaramurtti #NampiAruran #TampiranTolan #Tevaram #Tamil #ShaivaSiddhanta #tradition #Hinduism, #சிவன்பாடல் #sivansongs #sivan #sivansong #சிவன் #சிவன்பாடல் #newsivansongs #SIVANPADAL #SIVANSONGS #சிவராத்திரிபாடல் #தேவாரம்பாடல் #திருமுறைபாடல் #சிவனடியார்களின்குரல் #சிவனடியார்குரல் #sivanadiyar #ulagasivanadiyargal #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #thevaaram #Thevarapadal #sundararthevaram