У нас вы можете посмотреть бесплатно மிக கடுமையான பாவங்களை போக்கும் குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் கண்பார்வை கோளாறு நிவர்த்தி தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள் கண்ணாயிரநாதர் கோயில் திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி ) (17/274) தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் பதினேழாவது தலமாகப் போற்றப் படுகிறது. இறைவன்: கண்ணாயிரநாதர், கண்ணாயிரமுடையார், சகஸ்ரநேத்ரேஸ்வரர். இறைவி: முருகுவளர்கோதை, சுகுந்தகுந்தளாம்பிகை. தல விருட்சம்: சரக்கொன்றை. தல தீர்த்தம்: இந்திர தீர்த்தம். புராண பெயர்: திருக்கண்ணார்கோவில் ஊர்: குறுமாணக்குடி மாவட்டம்: மயிலாடுதுறை ஆலயப் பூஜை காலம்: நாள்தோறும் காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். ஆலய அமைப்பு கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு ராஜகோபுரமில்லை கிடையாது. ஒரு கட்டைக்கோபுர வாயில் மட்டும் உள்ளது. கோயிலுக்கு வெளியே எதிரில் இந்திர தீர்த்தம் உள்ளது. கட்டைக்கோபுர வாயிலின் முகப்பின் மேலாக காணும்போது, ரிஷபாரூடர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் உருவங்கள் சுதை வடிவில் வண்ணத்திலிருப்பதைக் காணலாம். உள் நுழைந்ததும் நீண்ட கல் மண்டபம் அழகாக காட்சியளித்தது. வாயிலின் ஒரு புறத்தில் குழந்தை விநாயகர் இருக்கிறார்.மறுபுறத்தில், தண்டபாணி அருள்புரிகிறார் இரண்டாவது வாயில் வழியே உள் புகுந்தால். இங்கு செப்புக் கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெறலாம். அடுத்திருந்த கொடிமரத்து விநாயகரை வணங்கி நகரலாம். தொடர்ச்சியாக, நந்தியாரைக் கண்டு வணங்கி, ஆலயத்துள் வணங்கச் செல்ல விண்ணப்பம் செய்து நகர்ந்தால்,அடுத்து பலிபீடம் உள்மண்டபத்திலிருந்த கோஷ்ட தட்சிணாமூர்த்தியை கண்டு வணங்கிக் கொள்ளலாம். பிராகாரத்தில் இருந்த நால்வரையும், இதையடுத்து, கன்னி விநாயகரையும் கண்டு தரிசித்து வணங்கி நகர்ந்தோம். ஆறுமுக சுவாமி இடத்தில் கஜலட்சுமி சந்நிதி இருக்க கைதொழுது கொண்டோம். இதனெதிர் மண்டபத்தில் சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. பிராகாரத்தில் தொடர்ந்து பைரவர், சனிபகவான், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள் மண்டபத்தின் வலதுபுறத்தில் பள்ளியறையும், பக்கத்தில் அம்பாள் சந்நிதியும் உள்ளன. ஈசன், கருவறையில் மூலவர் கண்ணாயிரநாதர் கிழக்கு நோக்கி சுயம்புத் திருமேனியுடன் எழுந்தருளிக் கொண்டிருந்தார். பாணப்பகுதி சற்று உயரமானதாகத் தெரிந்தது. பெயருக்கேற்றதுபோல், திருமேனி முழுவதிலும் கண்களானது போன்று பள்ளம் பள்ளமாக உள்ளன. மூலவர் மண்டபத்திலிருந்த சந்திரசேகர் திருமேனியைக் கண்டு வணங்கிக் கொள்ளலாம். அடுத்து நடராஜர் சபை உள்ளது. அடுத்து, பிரதோஷ நாயகர், அஸ்திரதேவர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், விநாயகர் முதலிய உற்சவ மூர்த்தங்களைக் கண்டு, தொடர்ந்து ஒவ்வொருவரையும் வணங்கிக் கொள்ளலாம். கோஷ்டத்நில் வலம் செய்கையில், கோஷ்ட மூர்த்தங்களான நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் கண்டு வணங்கி நகரலாம். அடுத்து, சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று இவருக்குண்டான மரபு முறைப்படி வணங்கித் திரும்பலாம். இத்தலத்தில் சுவாமிக்குத் தீபாராதனை செய்து, அடுத்து அம்பாளுக்கும் தீபாராதனை செய்து, அதற்குப்பிறகே திருநீறும், குங்குமமும் வழங்கும் மரபு இக்கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. தல வரலாறு: தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அகலிகையுடன் சந்தோஷமாக இருப்பதற்காக சூழ்ச்சி செய்தான். எனவே இந்திரன், முனிவரின் வடிவம் எடுத்து அகலிகையை பார்க்க சென்றான். வந்திருப்பது தன் கணவர் அல்ல என்பது தெரிந்தும், இந்திரன் மீது கொண்ட ஆசையினால் தவறு செய்ய தானும் சம்மதித்தாள். இதற்குள் முனிவர் திரும்பி வர,கெளதமன் வருகையை அறிந்த இந்திரன், பூனையாக உருவெடுத்துக் கொண்டு ஒழிந்து கொண்டான். அகலிகை பயமெடுத்துப் போல ஒரு ஓரமாக நின்றாள். இந்திரனைக் கண்டுவிட்ட கெளதமர், பெண் பித்துக் கொண்ட உணக்கு, உடல் எங்கும் யோனிகள் (பெண் குறிகள்) உண்டாகட்டும் என சபித்தார். அதன் பின்பு அகலிகையைப் பார்த்து, "நீ .. கல்லாகிப் போ! ' என சபித்து விட்டார். தவறை உணர்ந்த அகலிகை சாப விமோசனம் கேட்டாள்.... "ராமரின் திருவடி உன் மீது பட்டதும் சாபவிமோசனம் கிடைக்கும்" என்றார் முனிவர். இந்திரனும் தனக்கு ஏற்பட்ட இந்த துன்பத்திற்கு பரிகாரம் வேண்டி பிரம்மாவிடம் சென்று செய்வன யாதென வினவினான். அதற்கு பிரம்மா, குறுமாணக்குடிக்குச் சென்று, சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெறும்படி கூறினார். இந்திரனும் இத்தலத்திற்கு வந்து, இத்தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டான். அவனது உடம்பில் உருவாகியிருந்த ஆயிரம் யோனிகளும் (பெண் குறிகள்) ஆயிரம் கண்களாகத் தோன்றுமாறு அருள் செய்தார். இந்திரனின் சாபம் தீர்ந்தது. எனவே இத்தல இறைவன் "கண்ணாயிரமுடையார்" என்று பெயர் பெற்றார். வாமன அவதாரம் எடுத்த திருமாலும் இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட, அவருக்கும் அருள் செய்ததால் இத்தலத்திற்கு குறுமாணக்குடி என்ற மறு பெயரும் உண்டாயிற்று. அமைவிடம் வைத்தீஸ்வரன்கோயில் - மயிலாடுதுறை சாலையில் கதிராமங்கலம் என்ற ஊர் வரும். அங்கிருந்து பாகசாலை பிரியும் சாலையில் 3 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோயில் இருக்கிறது. சிதம்பரம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் வரை பேருந்தில் பயணம் செய்து அங்கிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இத்தலத்திற்கு செல்ல ஆட்டோ வசதி உள்ளது. கோயில் Google map link https://maps.app.goo.gl/BELCZpJqMrk8L... கோயில் தொடர்பு எண் +91 9244158673 +91 9952700790 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 பெண் சாபம் நீக்கும் திருவிசநல்லூர் ஆலய தரிசனம் • திருவிசநல்லூர் சிவயோகிநாதர் கோயில் | சதுர்... if you want to support us via UPI id 9655896987@ibl Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்