У нас вы можете посмотреть бесплатно ஊத்துக்காடு கலிங்கநர்த்தன கிருஷ்ணன் கோயில் | ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஊத்துக்காடு. ஊத்துக்காடு எனும் இந்தத் தலம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து வழிபட வேண்டியத் தலம். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் தேர்ந்தவர்கள் தேடிவந்து வணங்கிச் செல்ல வேண்டியத் தலம். மூலவர்: வேதநாராயண பெருமாள் உற்சவர்: காளிங்க நர்த்தன பெருமாள் ஊர்: ஊட்டுக்காடு மாவட்டம்: திருவாரூர் தலவரலாறு காமதேனு, கேட்டதைத் தரும் தெய்வீகப் பசு அல்லவா? அந்த காமதேனுவின் குழந்தைகள் நந்தினி என்றும் பட்டி என்றும் இரு பசுக்கள். இவை இரண்டையும் ஸ்ரீ காளிங்கநர்த்தன கிருஷ்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டு காமதேனு சென்று விட்டாள். இவை இரண்டுக்கும் இங்கு என்ன வேலை? இவைகள் இரண்டும் அருகில் ஆவூர் எனுமிடத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீ கைலாசநாதஸ்வாமியின் அபிஷேகத்திற்கென்று பாலைச் சொரிந்து கொடுத்தன. இந்த ஆவூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கைலாசநாதரை பசுபதீஸ்வரர் என்று அழைப்பார்கள். இந்த ஊத்துக்காடு எனும் இடம் ஒரு காலத்தில் புஷ்பவனமாக இருந்ததாம். நந்தினியும், பட்டியும் தினமும் வந்து ஈஸ்வர கைங்கர்யத்துக்காக மலர்களைத் தேடிவந்து கொய்து செல்வதாலும், இறைபணியில் இந்த ஊர் வளமுள்ள புஷ்பவனமாகப் பூத்துக் குலுங்கியதாம். இப்படி இவ்விரு பசுக்களும் இங்கு வந்து புஷ்பசேகரம் செய்து செல்வதைக் கண்ட நாரத முனிவர் சும்மாயிருப்பாரா? அவரும் இங்கு வந்து உட்கார்ந்துகொண்டு இந்தப் பசுக்கள் செய்யும் பகவத் கைங்கர்யத்தைப் பார்த்துக்கொண்டே, அவைகளுக்குச் சில புராணக் கதைகளைச் சொல்லி வந்தாராம். அப்படி அவர் புராணக் கதைகளைச் சொல்லி வருகையில் பாகவதத்தில் வரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கிக் கொண்டு வந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் ஐந்து வயது பாலகனாக இருந்த போது, தன் நண்பர்களுடன் ஆநிறைகளை ஓட்டிக்கொண்டு புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு சுனையில் காளிங்கன் எனும் ஒரு விஷப் பாம்பு இருந்து அந்த ஆநிறைகளுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாம். இதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அந்த காளிங்கனை அடக்கி, அவன் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்து அந்தச் சுனையில் குதித்து அவனோடு போராடினாராம். அவனும் தன்னால் இயன்ற வரைப் போராடிப் பார்த்தபின் தன் தலைமீது நர்த்தனமிடும் இந்த பாலகன் யார் எனும் உண்மையைப் புரிந்து கொண்டு அடங்கிவிட, அவனை ஸ்ரீ கிருஷ்ணர் அனுக்ரகம் செய்த கதையைச் சொன்னார். நாரத முனிவர் கதையைச் சொல்லிக் கொண்டே வர, நந்தினியும் பட்டியும் கதையைக் கேட்டுக் கொண்டே கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதனவாம். இதைக் கண்ட நாரதர் ஏன் இப்படி நீங்கள் இருவரும் அழுகிறீர்கள் என்று கேட்டாரம். அதற்கு அவ்விரு பசுக்களும் கண்ண பரமாத்மா ஐந்து வயது குழந்தை என்கிறீர்கள், இந்த காளிங்கனோ அதீதமான விஷம் கொண்ட பயங்கரமான ஜந்து. இவனோடு போராடும்போது அந்தக் குழந்தை கிருஷ்ணன் என்ன பாடுபட்டாரோ, எத்தனை சிரமங்களை அனுபவித்தாரோ என்பதை நினைத்து அழுகிறோம் என்றதாம். இப்படி நாரதருக்கும், நந்தினி பட்டி பசுக்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை தேவலோகத்திலிருந்த காமதேனு ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சென்று முறையிட்டுத் தன் குழந்தைகளின் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லி, அவர்களுடைய மனக்கவலையை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாம். இதனைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவ்விரு குழந்தைகளுக்கும் ஏற்பட்ட மனவேதனையை உணர்ந்து அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பூலோகத்துக்கு வந்து அவ்விரு பசுக்குழந்தைகளுக்கும் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி தேற்றினாராம். அப்போதும் கவலை படிந்த முகத்துடன் அவ்விரு குழந்தைகளும் ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்க்க, உடனே அவர் அந்த இடத்திலேயே ஒரு ஆழமான நீரூற்றை உண்டாக்கி அதில் காளிங்கனை வரவழைத்து, அவனுடன் போராடி, அவன் தலையில் நர்த்தனமாடி, பாருங்கள், நான் இவனுடன் போராடும்போது சிரமப்படவில்லை என்பதைக் காட்டினாராம். இவ்வளவையும் பார்த்து ரசித்த அவ்விரு குழந்தைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனவாம். நாரதர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம், நீங்கள் இங்கு காளிங்கனோடு மீண்டுமொருமுறை போராடியதால் இந்த இடம் தென் கோகுலமாக விளங்கட்டும் என்று அனுக்கிரகம் செய்யும்படி வேண்டினாராம். காளிங்க நர்த்தன பெருமாள் நாரதர் கேட்டுக் கொண்டபடியே ஸ்ரீ கிருஷ்ணன், இங்கு காளிங்கனுடன் போராடிய நிலையில் விக்கிரகமாக நிலைத்துப் புகழ் விளங்கும்படி இங்கேயே கோயில் கொண்டு விட்டாராம். அப்படிப்பட்ட காளிங்க நர்த்தன கிருஷ்ணன் விக்கிரகமாக விளங்க அவரை நாரத முனிவர் அங்கே ஸ்தாபித்து வைத்தார். பிராத்தனை ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் ஒரு பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு அமையாதவர்கள், திருமணம் தாமதம் ஆகிக் கொண்டிருப்பவர்கள், ராகு, கேது பரிகாரங்கள் செய்பவர்கள், நாகதோஷம், சர்ப்ப தோஷம் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பொதுவான பக்தர்களும் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர். தலசிறப்பு காளிங்கன் தலைக்கும் கண்ணபிரானின் காலுக்கும் இடையே ஒரு நூல் அல்லது காகிதம் நுழையுமளவுக்கு இடைவெளியிருக்கிறது. அவருடைய ஒரு கை அபயஹஸ்தம் காட்டி, மற்றொரு கரம் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி இருக்கிறது என்பது இந்த விக்கிரகத்தின் சிறப்பு. ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 9442699355 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google map link https://maps.app.goo.gl/cBq9ioJDSM1WA... அமைவிடம் கும்பகோணத்தில் இருந்து திருவைக்காவூர் செல்லும் வழியில் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருக்கருக்காவூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். if you want to support us via UPI id 9655896987@ibl Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்