У нас вы можете посмотреть бесплатно புதுவை எம்.ஐ.டி கல்லூரியில் (மணக்குள விநாயகர் இன்ஸ்டுடியூட் ஆப் டெக்னாலஜி) или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புதுவை எம்.ஐ.டி கல்லூரியில் (மணக்குள விநாயகர் இன்ஸ்டுடியூட் ஆப் டெக்னாலஜி) மகளிர் தின விழா - 2026 புதுவை கலிதர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மகளிர் தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரி முதல்வர் முனைவர். எஸ். மலர்க்கண் தொடங்கி வைத்தார். மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. எம். தனசேகரன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் திரு. ராஜராஜன் மற்றும் இணை செயலாளர் திரு. வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். மார்ச் 9 2026 காலை 10:30 மணி அளவில் கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர். ஜே. எஸ். லஷ்மி, இயக்குனர், பினாசி டென்டல் கிளினிக் மற்றும் கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட செல்வி. திவ்யா, மலையேறும் பெண் சாதனையாளர், ஆகியோர் அவர்களினுடைய உரையில், பெண்கள் தங்களது வாழ்க்கையை சிறந்த முறையில் வாழ தேவையான வழிமுறைகள் பற்றியும், வேலை வாழ்க்கை சமநிலை பற்றியும், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றியும் விரிவாக பேசினார்கள். மகளிர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, பெண் மாணவிகளின் தொழில் முனைவோர் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து, அவர்களின் கையால் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பதற்காக, “சந்தை” என்ற ஸ்டால்களை கொண்ட ஒரு ஷாப்பிங் திருவிழாவை கல்லூரி IQAC மற்றும் கலாச்சார கிளப் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் அதிகபட்ச விற்பனையை செய்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வின்போது, பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் “தி கால்” என்ற மாணவர்களின் குறும்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்றது. திரைப்படக் குழுவினர் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். புதுவை மற்றும் தமிழ்நாடு கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான எறிபந்து போட்டி நடத்தப்பட்டு பரிசு வென்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கல்லூரியின் பெண் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், மகளிர் ஊழியர்களுக்கு பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பின்னர் பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை வுமன் எம்பவர்மென்ட் செல் தலைவர் டீன் (Academics) முனைவர். A. தேன்மொழி, கல்லூரி R&D துறை டீன் முனைவர். ஆர். வள்ளி, மற்றும் டீன் வேலைவாய்ப்பு துறை முனைவர். M. ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.