У нас вы можете посмотреть бесплатно கருவாச்சி காவியம் முழுவதும் | karuvachi kaviyam full story | வைரமுத்து | vairamuthu или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வைரமுத்து அவர்களின் எழுத்துத் திறமையில் மிளிரும் புத்தகமே கருவாச்சி காவியம். படிக்கும் போது கிராமத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்த உணர்வு. கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புத்தகத்தில் பேயத் தேவர் என்ற நபரை நம்மிடையே நடமாடவிட்டு அசத்தியவர். இதில் கருவாச்சி என்ற பெண்ணைக் கொண்டு வந்து அதகளம் செய்து இருக்கிறார். வர்ணனையில் கள்ளிக்காட்டு இதிகாசத்தை விட இதில் பட்டையக் கிளப்பி இருக்கிறார். கருவாச்சி காவியம் கதை திருமணமாகி 11 நாட்களிலேயே பழைய பரம்பரைப் பகையை மனதில் வைத்துக் கருவாச்சியை கணவன் கட்டையன் விலக்கி வைக்க, தனி ஒரு ஆளாக எப்படித் தன் வாழ்க்கையைத் தைரியமுடன் எதிர்கொள்கிறாள் என்பதே கதை. Karuvachi Kaviyam கருவாச்சி காவியம் கள்ளிக்காட்டு இதிகாசம் போல இதிலும் சிரமம் சிரமம் என்று புத்தகம் முழுக்க இதுவே இருக்கிறது. நமக்கே ஒரு கட்டத்தில் பேயத்தேவரை போலக் கருவாச்சிக்கு நல்லது நடக்காதா என்று ஏங்க வைத்து விடுகிறது. அந்த அளவுக்குச் சுழட்டி அடிக்கிறது பிரச்சனைகள். இத்தனை இருந்தும் அதை மறக்கடிப்பது இடையிடையே வரும் வர்ணனைகள் தான். இந்தப் புத்தகம் வர்ணனைகளுக்காகவே படிக்கலாம், கதை இரண்டாவது தான். வர்ணனை ஒரு புத்தகத்திற்கு வலு சேர்க்கும் மிக முக்கியமான விசயம் “வர்ணனை”. வர்ணனை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் ஒரு புத்தகம் ஒருவர் மனதில் நிற்பதும் மறைவதும். சுமாரான கதைகள் கூட வர்ணனை நன்றாக இருந்தால், படிக்கச் சுவாரசியமாக இருக்கும். புரியும் படி கூறுவதென்றால், திரைப்படத்தில் கதையே இருக்காது ஆனால், திரைக்கதையில் விறுவிறுப்பைக் கூட்டி நம்மை ரசிக்க வைத்து இருப்பார்கள். இதுவே புத்தகங்களுக்கும் பொருந்தும். வைரமுத்து வர்ணனைகளை இந்தப் புத்தகத்தில் வாரி இறைத்து இருக்கிறார். ஒரு பக்கத்துக்குச் சராசரியாக ஐந்து வர்ணனைகள் இருக்கிறது. தலையில் பேன் பார்ப்பதைக் கூட ஒருத்தர் இப்படிச் சுவாரசியமாக விவரிக்க முடியுமா!! என்று மிரட்டி இருக்கிறார். வெள்ளெருக்கம் பூவு – கத்திரி மஞ்சள் – கருஞ்சீரகம் – கருமொளகு – பச்சக்கர்ப்பூரம் – அஞ்சையும் வச்சு நசநசன்னு நசுக்கி, பூப்போலப் பொடிபண்ணி அத ஒருபடி நல்லெண்ணெய்யில போட்டு மூணு நாள் ஊறவச்சா. நாலாம்நாள் எடுத்து அடுப்புக்கூட்டிப் புளிய வெறகெரிச்சு ஒருபடி நல்லெண்ணெய அரப்படியாச் சுண்டவச்சா. சமீன்தார் மூட்டுல மூணு நாள் தடவிவிட்டுக் கரம்ப மண்ணப் போட்டுக் கழுவிவிட்டா பாருங்க.. விடிய்ய, வேட்டைக்குப் போகலாங்கிற அளவுக்குச் சமீந்தார் வலி ஊரவிட்டே ஓடிப்போச்சு என்று வைத்தியச்சியைப் பற்றி விவரிக்கிறார். கருவாச்சியின் சக்களத்தியாக வரும் பேயம்மாவை வர்ணிப்பதிலும் கிராமத்து கிளுகிளுப்பாகக் கூறுவதிலும் அசத்துகிறார். கண்ணாடி வளவிச்சத்தம் தெருவையே தெரட்டியடிக்க – சும்மா “ணங்கு… ணங்கு… ணங்கு…”ன்னு எறங்குற ஒலக்க ஓரளக்குள்ள புகுந்து கல்வாத்தியம் வாசிக்க – ஏறி ஏறி எறங்குற அவ மார்பு ரெண்டும் மனுசப் பொழப்பும் இப்படித்தாண்டான்னு தன்னால் தத்துவம் பேச – வெறும் விரல்கடை அளவு மட்டுமே தெரிஞ்ச அவ இடுப்பு, இப்பக் கையளவு தெரிஞ்சு கண்காட்சி காட்ட ஓங்கி ஓங்கி ஒலக்க போட்டா; சொங்க விட்டுச் சோள அரிசி எட்டிப்பாக்குற மாதிரி வீட்ட விட்டு வந்து வெளிய எட்டிப்பாக்குது ஊரு. உடல் வலி நீங்க கருவாச்சியின் அம்மா பெரியமூக்கி உடல் வலி நீங்க அமுக்கி விடுவதைப் படித்தாலே நமக்கு வலி எல்லாம் போய்டும் போல வெரலப் புடிச்சுப் பெருவிரலால நகத்த ஒரு அழுத்து அழுத்தி, சொன்னா வந்திருன்னு ஒரு சுண்டு சுண்டுவா பாருங்க சடக் சடக்குங்குற சத்தத்தோட ஒடஞ்சு வெளியேறும் சொடக்கு. இந்தக் கட்டை வெரல் நாலு மட்டும் எடக்குப் பண்ணும் சொடக்குப் போட. கட்டைவெரல் சொடக்குப் போடச் சூத்திரம் இருக்கு. உள்ளங்கையில ஒரு கூடு பண்ணி உள்ளுக்கு இழுத்துக்கிருவா கட்ட வெரல. அதத் தடவித் தன் வசமாக்கிப் படக்குன்னு இழுத்து மடக்குன்னு ஒடிப்பா; கடக்குன்னு சத்தம் கேட்கும். எண்ணெய் தேய்த்து விடுவது, சமையல் செய்வது, வேலை செய்வது என்று தாறுமாறாக அள்ளித் தெளித்து இருக்கிறார். எப்படிப்பா இத்தனை விசயங்களைக் கூற முடியும்? என்று திகைக்க வைக்கிறார். நானெல்லாம் சாப்பாட்டு பிரியனல்ல, நன்றாகச் சமைத்தால் விருப்பமாகச் சாப்பிடுவேன் அவ்வளவு தான். இதில் வைரமுத்து விளக்கும் சமையல் முறையைப் படித்தால், சாப்பிட்டே ஆக வேண்டும் போல, அப்படியொரு உணர்வு வருகிறது. இவற்றையெல்லாம் மற்றவர்களிடம் கேட்டுத் தான் இதில் பயன்படுத்தி இருக்க முடியும் ஆனால், அதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவது என்பது உண்மையிலே அசாத்தியமானது. கருவாட்டுக் குழம்புக்கு யாரும் பாக்காத ஒரு பண்டுதம் பாப்பா கருவாச்சி. மூணாங்கொதியில புளிகரைச்சு ஊத்தி நாலாங்கொதியில எறக்குறதுக்கு முன்னால கரண்டியில சுடவச்ச நல்லெண்ணயக் கருவாட்டுக் குழம்புச் சட்டிக்குள்ள எறக்கி – சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளாவு அளாவி மினு மினு மினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க… அந்த வாசன அடுத்தத் தெரு வரைக்கும் அடிக்கும்; நாக்குத் செத்த ஆளுக்கும் நமநமங்கும். எனக்குக் கருவாடு பிடிக்காது ஆனால், இதைப் படிக்கப் பிடித்து இருந்தது 🙂 . கூலிக்கு மாரடிப்பது கூலிக்கு மாரடிப்பது என்று கேள்விப் பட்டு இருப்பீர்கள். நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன் ஆனால், அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. இதில் அதைக் காட்சியோட விளக்கும் போது ஆயுசுக்கும் மறக்காது. அதோடு இதன் காரணமும் மிகச் சோகமானது. இந்தப் புத்தகத்திற்காக நிறைய Home Work செய்து இருக்கிறார். அதற்கு 100 / 100 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். சும்மா சொல்லக்கூடாதுங்க.. பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார். ஒவ்வொரு பக்கத்தின் விவரங்களையும் ரசித்துப் படித்தேன்.