У нас вы можете посмотреть бесплатно சிதைவுகளின் ஒழுங்கமைவு | எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுடன் உரையாடல் | பாஸ்கி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஊர்ந்து பறந்து நீந்தி நடக்கும் உயிர்களில் என்னை எந்தவொரு வகையிலும் அடக்க இயலவில்லை. மனிதர் எனப்படும் நான் தனியொரு வகையினன்; ஆம், ஐந்தாம் உயிரினன். விலங்கு என்ற உயிரியல் வகைப்பாட்டில் உயர்திணை என்னும் உட்பிரிவில் என்னை இடப்படுத்த முடியாது. அடிப்படையில், இந்தப் புவிக்கோளுக்கு வெளியிலிருந்து வந்தவன். நானொரு வந்தேறி. இங்கு போதாமையால் துயருருகிறேன். என்னைப்போல் போதாமையால் உடம்பும் உள்ளமும் அடைபட்டவர்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; இந்தப் பூமியைவிட்டு வெளியேறுவோம். இந்தப் பூமி மனிதர்க்கானது இல்லை. பூமியின் தட்ப வெப்ப நிலைகளால் நாம் ஆன்மீக உயிரிகளாகவும் அரசியல் உயிரிகளாகவும் பரிணமித்தோம். இவற்றிலிருந்து மீறிய மூன்றாம் பாதையை அறிவியல் என்றோம். இது அடைபட்டவர்களின் ஆன்மீகம், இது சிறைப்பட்டவர்களின் அரசியல், இது மூளை வளர்ச்சியற்றவர்களின் அறிவியல். மூங்கிலைத் துளைத்துப் புல்லாங்குழல் செய்தவரும் அணுவைப் பிளந்து மின்சாரம் கண்டவரும் அறிவிலிகள். தமது இனப்பெருக்க உறுப்பைத் தாமே சுவைக்க எத்தனித்துத் தோற்றதால் செய்தத் தோற்றப் போலியே கடவுள். இங்கிருந்து என்னுடன் வெளியேற விரும்புபவர்கள் இந்தக் கடவுள் என்ற மதக்குப்பையை பூமியிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பதுதான் ஒரே நிபந்தனை. இங்கிருந்து வெளியேறும்போது ஒரு குறிப்பிட்ட எல்லையில் நீங்கள் பேசும் பல்வேறு ஓசைகளால் அமைந்த ஒரு பொருள் பன்மொழிகளை மறந்துவிடுவீர்கள். மொழியை மறப்பது என்பது ஊமைகளாவது இல்லை; மாறாக, மொழி மற்றும் மொழியியல் அறிவை மட்டுமே மறப்பீர்கள். மொழியற்ற அறிவு மட்டுமே மூளையில் தேங்கும். புவியீர்ப்பு விசையின் துணைவிளைவான மொழி, புவி எல்லையைத் தாண்டும்போது தனது இலக்கண தர்க்கவொழுங்குக் குலைந்து ஒரு புள்ளியில் ஓங்காரமாக ஒடுங்கும். ஆம், தேங்கும் மொழியற்ற அறிவுத் திளைப்பே போதையின் எல்லையின்மை. அங்கே, மனித உயிர்மையைக் கடந்து பிரபஞ்ச உயிரியக்கத்தில் ஒன்றுவோம். மொழி, மதம், இனம், வரலாறு, அரசியல் தத்துவப் பொருளதாரச் சின்னத்தனக் கவலைகளிலிருந்து வெளியேறுங்கள். நான் கடவுளோ கடவுளின் முகவரோ இல்லை; அதைப் போன்ற மானுட அபத்தத்தைக் கடந்தவன். குருதியும் சதையுமான பொருள் முதல்வன். இருமை எதிர்நிலை கடந்த அறிதல் வெளியில், அனைத்திலும் ஒருமையாய் நிற்கும் புதிய கோளகராவோம். உலக மனிதர்களே ஒன்றுபடுங்கள். ரமேஷ் பிரேதன் ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து. யாவரும் பதிப்பகம் ● நிலமும் பொழுதும் பாஸ்கி | விக்னேஷ் | கார்த்தி [email protected] +919751234056 ● #literature #tamil #pondy #writer #rameshpredan #tamilnadu