У нас вы можете посмотреть бесплатно ஆமூர் ரவீஸ்வரர் கோயில் | ஜாதக தோஷ பரிகார தலம் | சூரிய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நிவர்த்தி தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஜாதக ரீதியிலான தோஷங்களை நீக்கும் ஆமூர் ரவீசுவரர் திருக்கோயில் மூலவர்: ரவீஸ்வரர் அம்மன்: ஆனந்தவல்லி தலவிருட்சம்: வில்வம் புராணப் பெயர்: திருஆதவத்தூர் ஊர்: ஆமூர் மாவட்டம்: திருச்சி தலவரலாறு திருக்கோயில் நுழைவுவாயில் ரவீசுவரர் சுவாமி எழுந்தருளியுள்ள ஆமூருக்கு திருஆதவத்தூர் என்ற பெயரும் உண்டு. சூரியனின் வெப்பத்தைத் தணித்த ஆமூர். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சூரிய பகவான், தாங்க முடியாத அளவின் வெப்பம் காரணமாக உஷ்ணத்தால் தகித்துக் கொண்டிருந்தார். தனது உஷ்ணத்தைத் தணிக்க பிரம்மாவிடம் சூரிய பகவான் முறையிட, ஆமூர் என்ற ஊரை அடைந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபட்டால், உனது உஷ்ணம் நீங்கும் என்றாராம். அதன்படி, ஆமூர் நோக்கி சூரிய பகவான் வந்து கொண்டிருந்தார். அப்போது சூரிய பகவானின் பார்வைபட்டு எதிரில் இருந்தவர்கள் எல்லாம் பஸ்பமாகிக் கொண்டிருந்தனர். ஆமூர் கோயிலுக்குள் வந்த போது சூரிய பகவானின் பார்வையால் தல விருட்சமாக இருந்த வில்வமரம் சாம்பலாகி, பஸ்பமானது. இதனால், தன் உஷ்ணத்தை தணிக்க தொடர்ந்து ஆமூர் கோயிலில் குடிகொண்ட இறைவனை சூரிய பகவான் மார்போடு அணைத்து பற்றிக் கொண்டதால், சூரியனின் உஷ்ணம் தணிந்தது. அவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பினார். இதைத் தொடர்ந்து உன் சன்னதிக்கு நேர் எதிரியிலேயே எனக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் உன்னை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என இறைவனிடம் (சிவபெருமான்) சூரிய பகவான் முறையிட்டார். ஆனால், எனது சன்னதிக்கு நேர் எதிரில் நந்தியெம்பெருமான் மட்டுமே எழுந்தருளியிருப்பார். அதனால் தம்பதி சகிதமாக உனக்கு நான் காட்சியளிக்கிறேன் என இறைவன் கூற, இக்கோயிலில் தம்பதி சகிதமாக சூரிய பகவானுக்கு காட்சியளிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்திருக்கோயில். ரவீசுவரம் என்றால் சூரியனைக் குறிக்கும். தன் பெயராலேயே லிங்கத்தை ஸ்தாபித்து சூரியன் வழிபட்டதால், இக்கோயில் ரவீசுவரம் என்றழைக்கப்படுகிறது. சூரியன் வழிபட்ட திருக்கோயில் இது என்பதால் இதற்கு பாஸ்கரேசுவரம் என்ற பெயரும் உண்டு. பிராத்தனை ஜாதக ரீதியில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோஷம் உள்ளவர்கள், தங்களது தோஷங்கள் நீங்க ஆமூர் அருள்மிகு ரவீசுவரர் சுவாமி திருக்கோயிலுக்குத் தொடர்ந்து 11 நாள்கள் வந்து, சுவாமி சன்னதியில் தங்களது ஜாதகத்தை வைத்து, வழிபாடு செய்து சென்றால், திருமணத் தடை நீங்குதல் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகமாகும். இதுபோல, படிப்புக்கேற்ற நிலையான வேலை கிடைக்க வேண்டும் எனில், இந்த சன்னதியில் 7 நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் உரிய பலன்களைப் பெறுவர். ஆனந்தவல்லி அம்மன் தெற்குத் திசை நோக்கிய சன்னதியில் சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில், அழகின் உருவமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன். இந்த அம்மனும், திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மனும் சகோதரிகள் என்றும், முன்பு ஒருகாலத்தில் ஆமூர் கோயிலில் பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்ட பின்னர், திருவானைக்கா கோயிலில் பூஜைகள் நடைபெற்று வந்ததாகவும், காலப்போக்கில் இந்த வழிபாட்டு முறைகள் நின்று போனதாகவும் கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இரட்டை வாகன பைரவர் பொதுவாக இறைவன் சன்னதி மண்டபத்துக்கு வெளியே தெற்குத் திசை நோக்கி தான் பைரவர் எழுந்தருளியிருப்பார். ஆனால், ஆமூரில் இறைவன் சன்னதி மண்டபப் பகுதியில் மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். இது மிகவும் விசேஷமானது. இரட்டை வாகன பைரவரின் வாகனம் நாய் (சமஸ்கிருதத்தில் சுனம்). ஆனால், இக்கோயிலில் வலதுபுறத்தில் சுனம் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார். இவ்வாறு பைரவர் எழுந்தருளியிருப்பதால், அவர் கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகளுக்கு இக்கோயிலின் பைரவர் சன்னதியில் நாவில் தேன் வைத்து செல்லுதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தன் பார்வையால் பஸ்பமாகிய வில்வமரத்தை, இறைவன் ரவீசுவரசுவாமி தரிசனத்துக்குப் பிறகு சூரிய பகவான் மீண்டும் பிரதிஷ்டை செய்தார். இந்த வில்வமரம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்த மரத்துக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, மரத்துக்கு அருகிலுள்ள லிங்கத்தை (சிவபெருமான்) மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் நம் வாழ்வு செழிக்கும் என்பதும் ஐதீகம். அதனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி, லிங்கத்தை வழிபாடு செய்து செல்லும் நிகழ்வு இன்றும் நிகழ்ந்து வருகிறது. அமைவிடம் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் குணசீலம் தலத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 60 என்ற எண் கொண்ட பேருந்து இந்த தலத்திற்கு செல்லும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாமக்கல் செல்லும் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 6374183953 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google map link https://maps.app.goo.gl/xghbbTyrq36RB... திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோயில் தரிசனம் • திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோயில் |... if you want to support us via UPI id 9655896987@ibl Join this channel to get access to perks: / @mathina தமிழ்