У нас вы можете посмотреть бесплатно உற்பத்தி குறைந்ததால் பருப்பு விலை 20 சதவீதம் உயர்வு Pulses price hike| Import from china go down или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#Partnership உள்நாட்டு தேவைக்காக, ரசாயனங்கள், உரங்கள், ஸ்டீல், செயற்கை நுாலிழை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2024 - 25ம் ஆண்டில் மேற்கண்ட பொருட்களின் இறக்குமதி கணிசமாக குறைந்துள்ளது. 2014 - 15ம் ஆண்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மொபைல் போன்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024 - 25ம் ஆண்டில், 3,700 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. உள்நாட்டில் மொபைல் போன் உற்பத்தி அதிகரித்துள்ளதால், இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம், 10 ஆண்டுகளுக்கு முன், 1566 கோடி ரூபாய் மதிப்பிலான மொபைல் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அது தற்போது 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நம் மக்களுக்கான தேவையை கூடுமான வரை உள்நாட்டு உற்பத்தியிலேயே பூர்த்தி செய்யவும், மிக மிக அத்தியாவசியமான சூழலில் மட்டும், இறக்குமதி செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுவதாக அதிகாரிகள் கூறினர். பிரீமியம் பைக் விலை குறையும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குக்கு 100 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. 2018 முதல் இதற்கான வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தால், இவ்வகை பிரீமியம் பைக்குகள் மீதான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோன்ற நடைமுறை அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பிரீமியம் பைக்குகளின் விலை அதிரடியாக குறையும் என, விற்பனையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பருப்பு விலை உயர்வு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு பருப்புகளின் உற்பத்தி குறைந்ததை அடுத்து, அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால், துவரம் பருப்பு விலை 20 சதவீதமும், உளுந்து விலை 11 சதவீதமும், கடலைப் பருப்பு விலை 9 சதவீதமும் உயர்ந்துள்ளது. கடந்த 2024ல் இறக்கம் கண்ட பருப்பு விலை தற்போது மீண்டும் உயர துவங்கியுள்ளது. பருப்பு ஆலைகளின் தரவுப்படி, 105 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உயர் தர துவரம் விலை 129 ரூபாயாக உயர்ந்துள்ளது. 1 கிலோ உளுந்து 82 ரூபாய்க்கும், கடலை பருப்பு 68 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக, இந்திய பருப்பு மற்றும் தானிய சங்கம் தெரிவித்துள்ளது.#Pulses price hike| Premium bike price will go down| Import from china go down