У нас вы можете посмотреть бесплатно மாணிக்க வாசகரின் திருவாசகம் திருப்பூவல்லி பகுதி 1 - Thirupoovalli by Manickavasagar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#yavarumtamilkezhir #tamilliterature #bhakthiliterature #thiruvasagam #thirupoovalli #manickavasagar #vathavoorar #shaivam #shiva இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே, துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்; அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ! 1 எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்; அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ! 2 நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து, தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான், மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின் வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ! 3 பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே, எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல், விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால் புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!4 தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான் ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும் வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ! 5 எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி, சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி, உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே புரம் மூன்று எரித்தவார் பூவல்லி கொய்யாமோ! 6 வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து; இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான், அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ! 7 நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி, முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக் கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ! 8 பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர் என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய், கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள் பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!9 பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான், சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான், கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி, போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ! 10 அடிகள் தொடரும் திருச்சிற்றம்பலம்