У нас вы можете посмотреть бесплатно ஓசூரில் விளை நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையம் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ஓசூர் அருகே உள்ள பலவனப்பள்ளி, முத்தாலி, அடவனப்பள்ளி, தாசப்பள்ளி, பெத்தமுத்தாலி, அட்டூர், அலேநத்தம், காருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, மிடுதேப்பள்ளி ஆகிய 12 கிராமங்களில் விவசாய நிலங்கள் உள்பட 2,980 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாடு அரசின் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைக்கு ஓசூர் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஓசூர் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரவை மாநில செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலுசாமி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் தரப்பில் விமான நிலையம் அமைப்பதற்கு தங்களின் விளை நிலங்களை விட்டுத்தர மாட்டோம் என்றும் எங்களுக்கு விமான நிலையம் தேவையில்லை எனவும் ஒருமித்த குரலில் அனைவரும் தெரிவித்தனர். விமான நிலையம் அமைப்பதற்கு தங்கள் பகுதியில் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.