У нас вы можете посмотреть бесплатно தஞ்சையாளி நகர் வீர நரசிம்மர் கோயில் | மூன்று கோயில்கள் ஒரே திவ்ய தேசம்| சத்ரு உபாதைகள் நீக்கும் தலம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தஞ்சையாளி நகர் வீர நரசிம்மர் கோயில் தஞ்சாவூர் மூலவர் : வீரநரசசிம்மர் தாயார் : தஞ்சை நாயகி தீர்த்தம் : வெண்ணாறு, சூர்ய புஷ்கரிணி. தல விருட்சம்:மகிழம் புராண பெயர்: தஞ்சையாளி நகர் ஊர்: தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சாவூர் மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு பெருமாள் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோவில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார். பெருமாளின் 108 திவ்ய தேச கோவில்களில் தஞ்சாவூர் அருள்மிகு நீலமேகப் பெருமாள் (மாமணி) திருக்கோவில் 20 வது திவ்ய தேசமாக விளங்குகிறது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டதாகும். பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. கோவில் தனிச்சிறப்பு : மூன்று கோவில்கள் ஒரே திவ்ய தேசமாக விளங்கும் தலம் தஞ்சை நகரை பார்த்தபடி அமைந்திருக்கும் பெருமாளின் சன்னதி பிரதோஷ வேளையில் சிறப்பு வழிபாடு நடக்கும் தலம் தல வரலாறு: சிவனிடம் சக்தி வாய்ந்த வரங்கள் பெற்ற தஞ்சகன், தண்டகன், கஞ்சமுகன் எனும் மூன்று அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்த மற்ற முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். அவர்களிடம் இருந்து தங்களை காக்கும் படி இத்தலம் வந்து பராசர் தவம் செய்தார். தஞ்சகனை தனது சுதர்சன சக்கரத்தால் வதம் செய்தார். அவன் கேட்டுக் கொண்டதன் படி இத்தலம் அவன் பெயராலேயே அழைக்கப்படும் என வரமளித்தார். அதனாலேயே இந்த தலத்திற்கு தஞ்சாவூர் என்ற பெயர் வந்தது. கஞ்சமுகனை வதம் செய்து யாழியாக மாற்றிக் கொண்டார் பெருமாள். வராக அவதாரம் எடுத்து தண்டகனை வதம் செய்தார் பெருமாள். மூன்று கோவில்களும் ஒன்றான தலம் மூன்று கோவில்களும் ஒன்றான தலம் மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோவில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார். வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோவில், மணிகுன்றப் பெருமாள் கோவில், நரசிம்மப் பெருமாள் கோவில் என மூன்று கோவில்களும் ஒரே திவ்ய தேச தலமாகவே பாடல் கருதி போற்றப்படுகின்றன. இத்தலத்திற்கு பராசர ஷேத்திரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு. கோவில் அமைப்பு: இத்தல இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தாயாருடன் அருள்பாலிக்கிறார். மூன்று தலங்களிலும் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். சிங்கப்பெருமாள் கோவிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப்பெருமாள் கோவில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர். அம்புஜவல்லி தாயார் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். நீலமேகப் பெருமாள் மூன்று நிலை ராஜகோபுரங்கள் அமைந்த சன்னதியில் காட்சி தருகிறார்.இத்தல தீர்த்தம் ராம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் ஹயக்ரீவர், வேதாந்த தேசிகர், ஆழ்வார்கள், கருடர் ஆகியோரின் சந்நிகள் அமைந்துள்ளன. தலபெருமை: வீர நரசிம்ம பெருமாள், வீற்றிருந்த திருக்கோலத்தில் மார்கண்டேயருக்கு தரிசனம் தந்த நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள தீர்த்தத்திற்கு சூர்ய புஷ்கரிணி என்று பெயர். இக்கோவில் பல்வேறு காலகட்டங்களில் சோழர்கள், விஜயநகர பேரரசர்கள், மதுரை நாயக்கர்களால் பாதுகாத்து, புனரமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாமணிக் கோவில் - இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் நீலமேகப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி, செங்கமலவல்லி. தீர்த்தம், கன்னிகா புஷ்கரணி, வெண்ணாறு. இக்கோவிலின் விமானம் சௌந்தாய விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. மணிக்குன்றம் கோவிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி, அம்புச வல்லி. தீர்த்தம், ஸ்ரீராம தீர்த்தம். இக்கோவிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. ஒன்றான மூன்று கோவில் தஞ்சையாளி நகர் கோவிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி,தஞ்சை நாயகி. தீர்த்தம் சூர்ய புஷ்கரிணி. இக்கோவிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இந்த மூன்று தலங்களும் முந்தைய காலத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும், பிறகு நாயக்கர்கள் காலத்தில் தஞ்சைக்கு உட்பட்ட பகுதிக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிரார்த்தனை பிரதோஷ வேளையில் வீரநரசிம்மரை வழிபட்டால் வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறிய பிறகு நீலமேகர், மணிக்குன்ற பெருமாளுக்கு சர்க்கரைப்பொங்கல், நரசிம்மருக்கு பானகம் படைத்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். அமைவிடம் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது. ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 8098032625 மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google Map Link https://maps.app.goo.gl/SYDpgdLeRzrHa... தஞ்சாவூர் மாமணி கோயில் தரிசனம் • தஞ்சை மாமணி கோயில் | நீலமேக பெருமாள் கோயில... தஞ்சாவூர் மணிகுன்ற பெருமாள் கோயில் தரிசனம் • தஞ்சாவூர் மணிகுன்ற பெருமாள் கோயில் | மூன்ற... நாமக்கல் நரசிம்மர் கோயில் தரிசனம் • நாமக்கல் நாமகிரி தாயார் சமேத ஶ்ரீ லட்சுமி ... if you want to support us via Google pay phone pay paytm 9655896987 Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்