У нас вы можете посмотреть бесплатно மொக்கச்சாமி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றப் போகிறார்களாம். நாம் நமது எதிர்ப்பியக்கத்தாலும், உணர்ச்சிகரமான போராட்டங்களாலும் இலங்கைத் தூதரகத்தை தமிழகத்தை விட்டு ஓட ஓட விரட்டிக் கலைத்து விட்டோம் என்று மார் தட்டிப் பெருமைப் பட முடியாது தோழர்களே. சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழ் அகதிகள் (பதிவில் உள்ளது மட்டும்) கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழக திறந்தவெளிச் சிறைகளில் அல்லலுற்றார்கள் என்பதை உங்களுக்கு விபரிக்க வேண்டிய அவசியம் இருக்காதென நினைக்கிறேன். இப்போ அதிகளவிலான அகதிகள் தாயகம் மீளச் செல்லும் விருப்பத்தைத் தெரிவித்ததும்தான் இந்த தூதரக மாநில மாற்றம். சொல்லப்படும் காரணமாக இருப்பது ஈழ ஆதரவாளர்களால் ஆபத்து என்பது. உண்மை அதுவல்ல. அகதிகளின் திரும்பிச் செல்வதை மட்டுப்படுத்தவே. அவர்கள் அங்கு போனால் வாழ்வார்கள். தங்கள் உழைப்பில் நம்பிக்கை உள்ள மக்கள். யோசித்துப்பாருங்கள் 25வருடங்களுக்கு மேலாக அகதிச் சிறைகளில் வாடும் மக்கள் தங்கள் தாயகத்துக்குத் திரும்பிச் செல்ல இவ்வளவு தொகை செலவு செய்ய எங்கே போவார்கள்...? அத்தோடு விமானச்சீட்டு, அது இதுவென ஏகப்பட்டது. தவிர இப்போ தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றினால் தற்காலிகக் கடவுச்சீட்டு மற்றும் பயணச்சான்று விண்ணப்பிக்கவோ, பெற்றுக் கொள்வதற்கோ அகதிகள் மாநிலம் விட்டு மாநிலம் போக அனுமதியில்லை, அப்படி இருந்தாலும் கேரளா போவதற்கு ஏற்படும் மேலதிக செலவு, மொழிப்பிரச்சினை இப்படி ஏகப்பட்ட தண்டனைகளும், அவலங்களும். மீண்டும் மீண்டும் எல்லா அரசுகளாலும், எல்லாவிதமான போராட்டங்களாலும், எல்லாவித போராளிகளாலும் வஞ்சிக்கப்படுவது ஈழத்தமிழர்கள் என்றே ஆகிவிட்டது. போராடவேண்டும் என தமது உணர்வுகளையும், போராட்டக் குணங்களையும் வெளிப்படுத்தத் தெரிந்தவர்களுக்கு, போராட்ட வடிவமோ, போராடும் தன்மையோ, பின்விளைவுகளையும் கருத்திலெடுத்து அதற்குரிய வகையில் போராட்ட வடிவத்தைத் திட்டமிட வேண்டும் என்ற சிந்தனையோ தெளிவோ இல்லாதிருக்கிறது.