У нас вы можете посмотреть бесплатно ஆண்டாள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய். பொருள்: பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற்கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும். விளக்கம்: “பாஞ்சஜன்யம்” என்னும் சங்கைத் திருமால் ஏந்தியிருக்கிறார். இந்தச் சங்கின் கதையைக் கேளுங்கள்: பஞ்சசன் என்ற அசுரன், கிருஷ்ணரின் குருவான சாந்தீபனி முனிவரின் மகனைக் கடத்திச் சென்று கடலுக்கு அடியில் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் கல்வி பயின்று முடித்ததும், குருதட்சணையாகத் தன் மகனை மீட்டுத் தர வேண்டும் என முனிவர் வேண்டினார். கிருஷ்ணர் கடலுக்கு அடியில் சென்று அந்த அசுரனை அழித்தார். அப்போது அந்த அசுரன் ஒரு சங்கின் வடிவமாக மாற, கிருஷ்ணர் அதைத் தனது கையில் ஏந்திக்கொண்டார். அசுரனின் உடலில் இருந்து உருவான சங்கு என்பதால், குருஷேத்திரப் போர்க்களத்தில் கிருஷ்ணர் அதை ஊதும் போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப் படைகள் அச்சத்தில் நடுங்கின. திருப்பாவை, மாலே மணிவண்ணா, ஆண்டாள் பாசுரம், மார்கழி பாடல்கள், கண்ணன் பாடல்கள், Thiruppavai, Male Manivanna, Andal Pasuram, Margazhi Songs. @bskpictures