У нас вы можете посмотреть бесплатно நீ கடல் அலை அல்ல; மகா சமுத்திரம்!!- YOU ARE NOT THE WAVE; GREAT OCEAN!!! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நவம்பர் 24 திங்கள் நீ கடல் அலை அல்ல; மகா சமுத்திரம்!! கடல் அலை தன் உண்மை சொரூபம் தண்ணீர் என்று அறியாமல் மரண பயத்தில் அலறுகிறது. தேகாத்ம புத்தியுள்ள மனிதன், தனதுண்மை அகண்ட ‘சச்சிதானந்தம்’ சொரூபம் என்பதை உணராமல் நித்தம் சாகிறான். —----------------------------------------------- YOU ARE NOT THE WAVE; GREAT OCEAN!!! The WAVE of the SEA not knowing its true form is WATER, howls in fear of death. A man with BODY CONSCIOUSNESS, without realising that his true form is “SATCITANANDA”dies daily. —------------------------------------------------- கடலில் ஒரு சிற்றலை ஐயோ! கரை நெருங்குகிறதே, கரையில் மோதி ‘நான்’ செத்து விடுவேன் என்று அலறியது. பின்னால் வந்த பேரலை பேசியது: இதோ பார்! ‘நான்’ உன்னை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருக்கிறேன். தைரியமாக இரு! நீ உன்னை யார் என்று பார்த்ததுண்டா? உன் நிஜம் உனக்குக் தெரியுமா? நான் சொல்லுவதை கேள்! நாம் அலை அல்ல; நமக்குள் பெரியது சிறியது என்பதும் முக்கியமல்ல. அலை என்ற தோன்றி மறையும் உருவம் உண்மை அல்ல; அது நம் தற்காலிக வடிவங்கள். நாம் அடிப்படையில் தண்ணீர்! தண்ணீர்! கடல் நீர்! அகண்ட மகா சமுத்திரம். நாம் அழிந்து போகும் தோன்றி மறையும் நிலையற்ற அலைகள் அல்ல. எனவே கவலையை விடு! நாம் நிரந்தரமான மகா சாகரம் (கடல்) என்று பெருமை கொள்! என்று பேரலை பெரியண்ணன் சிற்றலை சின்னணனுக்கு ஞான உபதேசம் செய்தது. பகவான் ரமண மகரிஷி இந்த அடிப்படை ஆன்மிக உண்மையைத்தான் தன் பக்தர்களுக்கு உபதேசிக்கிறார். நீ உறக்கத்தில் ஒடுங்கி விழிப்பில் தோன்றி நாளெல்லாம் ‘அது இது’ என்று கூத்தடிக்கும் அகந்தை உணர்வு அல்ல; அது உன்னுடைய உண்மை அல்ல; அது உன் நிஜத்தின் நிழல்; நிழலை யாராவது நிஜம் என்று சாதிப்பார்களா? நாம் அப்படிப்பட்ட அறியாமையில் தான் இருக்கிறோம். விழித்துக் கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறார். இதை உள்ளது நாற்பது பாடலில் விளக்குகிறார் உடனானே தன்னை யுணரார்க் குணர்ந்தார்க குடலளவே தான்ற னுணரார்க்- குடலுள்ளே தன்னுணர்ந்தார்க் கெல்லையறத் தானொளிரு நானிதுவே யின்னவரதம் பேதமென வெண்ணுவாய் தன்னை உணராத அஞ்ஞானிக்கும் தன்னை உணந்த ஞானிக்கும் உடல் ஆத்மா. உடல் அளவே ஆத்மா நான் யார்? என்று உணராதார்க்கு. உடலுள்ளே தன்னை யார்? என்று உணர்ந்த ஞானிக்கு நான் எனும் ஆத்மா எல்லை இல்லாமல் பிரகாசிக்கும் வஸ்து. இதுவே இருவருக்கும் உள்ள வேறுபாடு. அஞ்ஞானி உடலை நான் என்று பாவிக்கிறான்: ஞானி அகில உலகத்தையும் ‘தான்’ என்று பாவிக்கிறான். கடல் அலை தண்ணீர் தன் உண்மை சொரூபம் என்று உணராதததுபோல், தேகாத்ம புத்தி கொண்ட தனதுண்மை உணராத அஞ்ஞானி உடல் அழிவதோடு தானும் அழிந்து விடுவோம் என்று மரணபயம் கொள்கிறான். தான் உடல் அல்ல, அழிவில்லாத தோன்றி மறையாத ஆத்மா என்பதை உணர்ந்த ஞானி மரணபயமற்று மரணமில்லா பெருவாழ்வு வாழ்கிறான். அர்ஜுனன் பாரதப் போரில் தான் எதிரிகளை கொல்லப் போவதாக எண்ணி மயங்கி நின்றபோது, பகவான் கிருஷ்ணர, உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. அது நிரந்தரமானது என்று ‘ஆத்மஞானம்’ உபதேசம் செய்கிறார். பகவான் ரமண மகரிஷி தன்னை யார்? என்று முதலில் ஆத்ம விசாரம் செய்து தனதுண்மை அறிய வேண்டும் என்று உபதேசிக்கிறார். நானா ரெனமனமுண் ணாடியுள் நண்ணவே நானா மவன்றலை நாணமுற -நானானாத் தோன்றுமொன்று தானாகத் தோன்றினுநா னன்றுபொருள் பூன்றமது தானாம் பொருள். தனது உண்மை உணர மனம் தன்னுள் நாடி இதயம் சேரவே, ‘நான்’ எனும் அகந்தை உணர்வு மறைய, அவ்விடத்தில் ‘நான் நான்’ என்ற நிலையான ஆத்ம பூரண உணர்வு உதிக்கும்; தோன்றினாலும் அதுவே உண்மை வஸ்து. தான் தோன்றி மறையும் அழியும் உடல் அல்ல; அழியாத ஆத்ம சொரூபம் என்பதை உண்ர்ந்தவன் ஆத்ம ஞானி. பகவான் ரமணர் அடிப்படையில் ஈசனும் சீவனும் ஒன்று என்று உபதேச வுந்தியார் பாடலில் கூறுகிறார் இருக்கு மியற்கை லீசசீ வர்க ளொருபொருளே யாவ ருந்தீபற வுபாதி வுணர்வேவே றுந்தீபற ‘சத்சித்’ என்ற அடிப்படையில் ஈசனும் சீவனும் ஒன்று. நான் உடல் என்று பாவிக்கும் தேகாத்ம புத்தி சீவனை ஈசனிடமிருந்து பிரிக்கிறது. ஆத்ம விசாரத்தால் தன்னை அகண்ட ஆத்ம சொரூபமாக உணர்ந்தால் கடல் அலை அலறியது போல் நாம் மரணம் கண்டு அஞ்ச மாட்டோம். பீதியி லுனைச்சார் பீதியி லெனைச்சேர் பீதியுன் றனுக்கே னருணாசலா! “ஓம் தத் சத்” —------------------------------------------------