У нас вы можете посмотреть бесплатно காலைதோறும் புதியவை (20.02.2026) உயிரினும் மேலான அன்பு или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
உயிரினும் மேலான அன்பு பிப்ரவரி 20 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை, நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார், அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 1 யோவான் 4:12 கோடை விடுமுறைக்காக டேனியின் குடும்பத்தினர் தங்களுடைய வாகனத்தில் மிகவும் சந்தோஷமாக பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். டேனிக்கு ஒரு இளைய சகோதரன் இருந்தான். அப்பா மற்றும் அம்மா ஆகிய இருவருக்கும் இளையவன் மீது பாசம் அதிகம். அவர்கள் சென்ற வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அக்குடும்பத்தினர் மிக மோசமான விபத்தில் சிக்கினார்கள். இந்த விபத்தில் சிக்கிய நான்கு குடும்ப உறுப்பினர்களில் மைக் என்கிற இளைய சகோதரன் மிகவும் மோசமான காயங்களுடன் மீட்கப்பட்டான். மற்ற மூவருக்கும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு சென் றார்கள். சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மயக்க மருந்தின் விளைவாக அம்மா மயக்க நிலையில் இருந்தார். அப்பாவும் டேனியும் மைக் சிகிச்சை பெறும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அருகில் காத்திருந்தனர். விபத்தினால் இளைய மகனுக்கு நிறைய இரத்தம் வெளியேறியிருந்தது, எனவே அவனுக்கு அதிக அளவு இரத்தம் தேவைப்பட்டது. அப்பா தன்னுடைய இளைய மகனுக்காக தேவைப்பட்ட ரத்தத்தை கொடுக்க தயாராக இருந்தார். ஆனாலும் அவரால் கொடுக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவரின் மூத்த மகன் டேனியுடைய ரத்தம் மட்டுமே மைக்கிற்கு ஏற்றது என பரிசோதனை முடிவில் தெரியவந்தது. அப்போது டேனிக்கு எட்டு வயது மட்டுமே. எனவே இந்த ரத்தம் கொடுக்கக்கூடிய நிகழ்வை அவனுக்கு தன்னுடைய தந்தை விளக்க வேண்டிய தாயிருந்தது. அப்பா டேனியிடம் தனியாக உட்கார்ந்து பேசினார். என்ன செய்யப்போகிறார்கள் என்பதை விளக்கி கூறினார். அவனுடைய இரத்தம் அவன் சகோதரனுக்கு எவ்வளவு அவசியமானது என்பதை அவர் விளக்கி கூறினார். அந்த உரையாடலின் முடிவில் டேனி நிச்சயமாக தன்னுடைய ரத்தத்தை தன்னுடைய சகோதரனுக்கு கொடுக்கிறேன் அப்படி கொடுப்பதனால் அவன் சுகமாவான் என்று கூறினான். ரத்தம் கொடுக்கக்கூடிய நிகழ்வு துவங்கியது டேனியுடைய கையில் இருந்து ரத்தம் எடுக்க துவங்கிய போது டேனி தன்னுடைய தந்தையை பார்த்து அப்பா நான் எப்போது மரிப்பேன் என்று கண்ணீரோடு கேட்டான். தான் மரித்தால்தான் தன்னுடைய சகோதரன பிழைப்பான் என்று டேனி தவறாக புரிந்து கொண்டான் என அப்போதுதான் தந்தைக்கு புரிந்தது. தன்னுடைய ஜீவனையும் கொடுத்து தன் சகோதரனை காப்பாற்ற துனிந்த டேனியை தந்தை கண்ணீர் மல்க கட்டியணைத்தார். அன்பு அவன் உயிரைக்காட்டிலும் உயர்ந்ததாக இருந்ததை நினைத்து அவனுடைய தந்தை மிகவும் அவனை நேசிக்கத் துவங்கினார். பரமபிதா உங்களை நேசிக்கிறார். ஜெபம்: அன்பின் தேவனே உயிரினும் மேலான அன்பை வெளிப்படுத்த எங்களுக்கு கிருபை செய்தருளும், ஆமென்