У нас вы можете посмотреть бесплатно காலைதோறும் புதியவை (17.02.2026) நம் வாழ்வின் ஆதாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நம் வாழ்வின் ஆதாரம் பிப்ரவரி 17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது. யாக்கோபு 1:17 மஜோ மால்கோக்(Smajo Malcok) என்பவர் போஸ்னியா நாட்டிலுள்ள ஜெசிரோ (Jezero) கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஃபெஹிமா (Fehima) என்கிற மனைவியும் ஜுவாத் (Zuwad), காத்தீஃப் (Kadhif) என்கிற இரண்டு மகன்களும் இருந்தனர். இந்த போஸ்னியா மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதியில் இருந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. ஒரு ஏழைப்பெண் ஆற்றிலே தங்க மீனை பிடித்தாள் ஆனாலும் அதன்மீது இரக்கங்கொண்டு அதை மீண்டும் ஆற்றிலே விட்டுவிட்டாள். அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு சந்தோஷமும் செல்வமும் கிடைத்தது. அவள் தங்கமீனை ஆற்றில் மீண்டும் விட்டதாலேயே அவளுக்கு செல்வம் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் நம்பினார்கள். எனவே அப்பகுதியில் தங்க மீன்களை மக்கள் வாங்கி ஆற்றில் விடுவது வழக்கம். ஒருமுறை மால்கோக் ஆஸ்ட்ரியாவிற்கு பயணம் செய்து திரும்பிய போது தன்னுடைய மகன்களுக்காக இரண்டு தங்க மீன்களை வாங்கி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. அதனால் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் அங்கு போர் செய்ய இருந்தனர் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அந்தப் போரில் ஜெசிரோ கிராமம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது மால் கோக் கொல்லப்பட்டார். திரும்பி வந்து பெஹிமா பார்த்தபோது எல்லாம் பாழாய் கிடந்தது. அந்த இரண்டு தங்க மீன்களையுடைய மீன் தொட்டி மாத்திரம் இருந்தது. அவர்கள் வீட்டின் அருகில் இருந்த குளத்தில் அந்த தங்க மீன்களை அவள் போட்டுவிட்டாள். சிறிதுகாலம் வேறு இடங்களில் வசித்தார்கள் ஆனாலும் அவர்களுக்கு சரியான சூழல் இல்லாததால் மீண்டும் ஜெசிரோ கிராமத்திற்கு பெஹிமா தன்னுடைய மகன்களை அழைத்து வந்தாள். அனைத்தும் பாழாய் கிடந்த அந்த கிராமத்தில் அவர்கள் வீட்டின் அருகில் இருந்த குளத்தில் அநேக தங்கமீன்கள் பிரகாசமாக துள்ளிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. உடனே பெஹிமா தன் கணவர் கொடுத்த அந்த பரிசை நினைத்து பார்த்தாள். நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில் கணவர் விட்டுச் சென்ற அந்தப் பரிசு இப்பொழுது அவளுடைய வாழ்வாதாரமாக மாறியது. பாழாய் கிடந்த கிராமம் தற்போது தங்கமீன்கள் விற்கக்கூடிய மிக முக்கியமான இடமாக மாறியது. 1998ம் ஆண்டு மால்கோக் இல்லம் மீண்டும் அதே இடத்தில் கட்டப்பட்டது. இரண்டு கார்கள் வாங்கப்பட்டது பிள்ளைகள் சந்தோஷமாக தங்களுடைய எதிர்காலத்தைக் குறித்து கவலை இல்லாமல் வாழ்கிறார்கள். தேவன் நமக்கு கொடுக்கக்கூடிய தாலந்துகள் ஆசீர்வாதங்கள் அவருடைய கிருபை இரக்கம் யாவும் பாழாய் கிடக்கிற நம்முடைய வாழ்க்கையை ஆசீர்வாதமாக மாற்றுகிறார். வாழ்வின் ஆதாரம் இயேசு. ஜெபம்: நீர் கொடுத்த பரிசுகளை முறையாக பயன்படுத்த உதவும், ஆமென்.