У нас вы можете посмотреть бесплатно பிப்ரவரி - 9 அனுதினமும் தேவனோடு : பரலோக டிக்கெட் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!! பிப்ரவரி - 9 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, அனுதினமும் தேவனோடு : இன்றைய தலைப்பு : பரலோக டிக்கெட் 📘 “கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே.” (யாக்கோபு 5:8) தரிசனத்தை நோக்கிய ஓட்டம் கிறிஸ்தவர்களாகிய நம்முடைய மிகக்பெரிய லட்சியமே கிறிஸ்துவை தரிசிப்பதே. அந்த நாளானது மிகவும் நெருங்கிக்கொண்டே இருக்கிறது என்பதனை இன்றைய வேதவசனம் நமக்கு உணர்த்துகிறது. நாம் கிறிஸ்துவை முகமுகமாய் பார்த்து அவரோடு வாழவேண்டும் என்ற ஆசை எல்லாருடைய இருதயத்திலும் மலர்ந்திருக்கும். ஆனால் அவர் வரும் நாளை குறித்ததான எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அவர் வருகையை எதிர்பார்த்து வாழும் மாந்தருக்கு அவர் வருகை பெரிய மகிழ்ச்சி, வருகையை எதிர்பாரா மாந்தருக்கோ பெரிய அதிர்ச்சி. பிரியமானவர்களே! உறுதியற்ற உள்ளத்தோடு இருக்கிறீர்களா? திடன்கொண்டு அஞ்சாதிருங்கள். உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து மணவாளனை வரவேற்க மதியுடைய கன்னிகைளைப் போல ஆயத்தமாய் காத்திருப்போம். பரிசுத்தமாக வாழ்ந்து பரனை சந்திக்க ஆயத்தமாவோம். பரிசுத்தமே பயணச் சீட்டு நாம் தரிசிப்பது அவர் அன்பின் முகத்தையா? இல்லை அக்கினி போன்ற முகத்தையா? என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம். மணவாளனை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறவர்களே அவர் அன்பின் முகத்தை ரசிக்க முடியும். ஆனால் மனித உள்ளமானது தேவனை மறந்து பணத்தை தேடியே ஓடுகிறது. பக்தியின் வேஷத்தை தரித்துக்கொண்டு பாவம் செய்யவே துணிவு கொள்கிறது. தேவன் வருவாரா என்று கேள்வி எழுப்புகிறவர்கள் அநேகர். தேவன் இன்னும் வரவில்லையே என்று பரிகசிப்பவர்களும் உண்டு. ஆனால் தேவனுடைய வருகையின் தொனியானது உலகத்தில் தொனிக்கிறது. கடைசி கால சம்பவங்களை கண்ணார பார்க்கமுடிகிறது. யுத்தங்கள் முதல் கொள்ளை நோய்களையும் உலகம் சந்தித்த பின்னும் இன்னும் சிந்தியாமல் இருக்கிறது! இந்த பரலோக பயணத்தில் பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால் மட்டும் பயணம் சாத்தியம். இல்லை என்றால் பாதாளம் தான் நித்தியம். மண்ணுலகிலே விண்ணவரை எதிர்நோக்கியிருப்போம். பாழுலகில் பரமனின் சாயலை பெற்றிடுவோம். வாழ்நாளெல்லாம் நேசரோடு வாழ்ந்து சுகித்திருப்போம். நம்முடைய நேசருக்காக வாழ்நாளெல்லாம் காத்திருக்கிற நம்மை அவர் தாமே தம்மோடுகூட அழைத்து செல்வாராக!ஆமென். *******