У нас вы можете посмотреть бесплатно 🔴LIVE: பல்வேறு துறை சார்ந்த முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
TN - DIPR. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் (1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 78 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் இராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரம், நாமக்கல் மாவட்டம், வையப்பமலையில் அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு சுப்ரமணிய சாமி திருக்கோவில் மலைச்சாலை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அலுவலகக் கட்டடங்கள், பொது சுகாதார கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்கள். (2) வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மதுரையில் சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் 62.68 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள். (3) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், கோயம்புத்தூர், அவினாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்கள். (4) பதிவுத் துறை சார்பில் 14 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட கோயம்புத்தூர் (வடக்கு) பதிவு மாவட்டத்தில் சர்க்கார்சாமக்குளம் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகம், ஆகியவற்றை திறந்து வைக்கிறார்கள்.