У нас вы можете посмотреть бесплатно ஐவர்மலை குகைகோவில் ஒரு Visit | சமணர் படுகை | PS-2 | கி.பி. 870 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#ponniyinselvan2 #ps2 #aivarmalai பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த பல சமண முனிவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களில் பலரும் இந்த ஐவர்மலையில் தங்கி, தியானம் செய்து முக்தி அடைந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு தங்கி தூங்குவதற்கு பயன்படுத்திய கல் படுக்கைகள் இங்கு உள்ளன. இதற்கு சான்றாக, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள மலையில் சமண முனிவர்கள் அமர்ந்து தியானம் செய்த கோலத்திலும், நின்ற கோலத்திலும் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தற்போது இங்குள்ள சமண சிற்பங்கள் யாவும் சேதப்படுத்தப்படாமல் இருக்க தொல்லியல் துறையினர் ஐவர்மலையை பாதுகாத்து வருகின்றனர். ஐம்புலன்களை அடக்கி, தனது சித்தியால் (அறிவால்), ஐம்பூதங்களை அறிந்து வாழ்ந்தவர்களே ‘சித்தர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த காடு, மலை ஆகியவற்றில் அமர்ந்து தியானத்தின் மூலம் ஞானம் பெற்றனர். இந்த நிலையை பெற்றவர்கள்தான் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் விளங்குகின்றனர். அந்த வகையில் பழனி பகுதியில் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து முக்தி அடைந்துள்ளதை பல ஜீவசமாதிகள் மூலம் அறிய முடிகிறது. பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்களையும் உருவாக்கி தந்துள்ளது. அதேபோல் சமணர்கள் இந்த மலையில் ஞானம் பெற்று முக்தி அடைந்துள்ளனர். மகாபாரத இதிகாசம் நடைபெற்ற துவாபார யுக காலத்தில், பஞ்சபாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்து காடுகளில் வசித்தபோது, திரவுபதியுடன் இந்த மலையில் தங்கி இருந்ததால் இம்மலைக்கு ‘ஐவர் மலை’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகே தென்புறத்தில் அமைந்துள்ள மலை ‘துரியோதனன் மலை’ என்றும், ‘திரியோதிதை’ மலை என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.