У нас вы можете посмотреть бесплатно தடைகளை நீக்கும் சக்திவாய்ந்த 9 விநாயகர் துதிகள்/Ganesh Slokas for Success или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
moஅனைவருக்கும் வணக்கம். நம்முடைய ஆன்மீகம் & சாத்வீகம் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். இன்று புதன்கிழமை, காரிய சித்தி தரும் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளில், நம்முடைய எல்லாத் தடைகளையும் நீக்கி வெற்றியைத் தரக்கூடிய 9 முக்கியமான விநாயகர் ஸ்லோகங்களை இந்தப் பதிவில் காண்போம். இந்த ஸ்லோகங்களை தினமும் காலையில் அல்லது காரியங்கள் தொடங்கும் முன் சொல்வது மிகுந்த பலனைத் தரும். வீடியோவில் உள்ள பாடல்கள்: மூஷிக வாகன சுக்லாம் பரதரம் ஐந்து கரத்தனை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் பாலும் தெளிதேனும் கஜானனம் பூத கணாதி அல்லல்போம் வல்வினைபோம் விநாயகனே வெவ்வினையை கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை தொடர்ந்து இது போன்ற ஆன்மீகத் தகவல்களைப் பெற நம் சேனலை Subscribe செய்யவும். நன்றி!"#youtube #anmeega_thagaval #anmeegatamil #bakthi @MeenakshiSiva_63 மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித ஸூத்ர | வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே || 2. சுக்லாம் பரதரம் சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே || 3. ஐந்து கரத்தனை ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை | நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே || 4. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு || 5. பாலும் தெளிதேனும் பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா || 6. கஜானனம் பூத கணாதி கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் | உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் || 7. அல்லல்போம் வல்வினைபோம் அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால் || 8. விநாயகனே வெவ்வினையை விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் வீற்றிருப்பான் தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து. 9. கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை கணபதி என்றிடக் காலனும் கைதொழும் கணபதி என்றிடக் கருமம் ஆதலால் கணபதி என்றிடக் கவலை தீருமே