У нас вы можете посмотреть бесплатно திருநெல்வெண்ணெய்(நெய்வணை) | நல்வெணெய் விழுது பெய்து ஆடுதிர் | திருஞானசம்பந்தர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
03.096 திருநெல்வெண்ணெய்(நெய்வணை) | நல்வெணெய் விழுது பெய்து ஆடுதிர் | திருஞானசம்பந்தர் தேவாரம் | திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் #SwarnakadeswararTemple | #Thirunelvennai | #Neivanai | #ShivamumThamizhum | #Thirugnanasambandhar | #Thevaaram திருநெல்வெணெய் தற்போது நெய்வணை என்று வழங்குகிறது. இத்தலத்து கல்வெட்டு ஓன்றில் இத்தல இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய வழக்கில் வடமொழிப் பெயரான சொர்ணகடேஸ்வரர் என்று அழைக்கப்படும் இத்தல இறைவனை வணங்கி வழிபடுவர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர். இறைவர் : ஸ்ரீ சொர்ணகடேஸ்வரர், ஸ்ரீ நெல்வெண்ணெய்நாதர் இறைவியார் : ஸ்ரீ நீலமலர்க்கண்ணி, ஸ்ரீ பிருஹந்நாயகி திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இத்தலத்தைப் பற்றி பதிகம் பாடும் போது சம்பந்தர், வரிசையாக உலகெங்கும் பரந்த தொன்மையான புகழினையுடைய திருநெல்வெண்ணெய் என்றும் (3-வது பாடல்), நீர்வளம் மிக்க தொன்மையான புகழ் பொருந்திய திருநெல்வெண்ணெய் என்றும் (4-வது பாடல்), நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்றும் (11-வது பாடல்), இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். 00:17 நல்வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்தொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்தொறும் சொல் வணம் இடுவது சொல்லே. ..... (01) 01:51 நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க் கச்சிள அரவு அசைத்தீரே கச்சிள அரவு அசைத்தீர் உமைக் காண்பவர் அச்சமொடு அருவினை இலரே. ..... (02) 03:18 நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய அரைவிரி கோவணத்தீரே அரைவிரி கோவணத்தீர் உமை அலர்கொடு உரை விரிப்போர் உயர்ந்தோரே. ..... (03) 04:45 நீர் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய ஊர் மல்கி உறைய வல்லீரே ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் பார் மல்கு புகழவர் பண்பே. ..... (04) 06:23 நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய ஆடிளம் பாப்பு அசைத்தீரே ஆடிளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு பாடுளம் உடையவர் பண்பே. ..... (05) 08:06 நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய பெற்றிகொள் பிறை நுதலீரே பெற்றிகொள் பிறைநுதலீர் உமைப் பேணுதல் கற்று அறிவோர்கள் தம் கடனே. ..... (06) 09:11 நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய கறையணி மிடறு உடையீரே கறையணி மிடறு உடையீர் உமைக் காண்பவர் உறைவதும் உம் அடிக்கீழே. ..... (07) 09:49 நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவி அன்று அரக்கனை அசைவு செய்தீரே அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்பு செய்து இருக்க வல்லார் இடர் இலரே. ..... (08) 10:39 நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று இருவரை இடர்கள் செய்தீரே இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு பரவ வல்லார் பழி இலரே. ..... (09) 12:00 நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய சாக்கியச் சமண் கெடுத்தீரே சாக்கியச் சமண் கெடுத்தீர் உமைச் சார்வது பாக்கியம் உடையவர் பண்பே. ..... (10) 12:51 நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை நலமல்கு ஞானசம்பந்தன் நலமல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் சொல மல்குவார் துயர் இலரே. ..... (11) பதிகப் பலன் : நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத் தருகின்ற ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர். ஆலய முகவரி : அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோவில், நெய்வணை கிராமம், கூவாடு அஞ்சல், வழி எறையூர், உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம். PIN - 607 201 குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"