У нас вы можете посмотреть бесплатно திருஆரூர்ப்பரவையுண்மண்டளி | தூவாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் | சுந்தரர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
07.096 திருஆரூர்ப்பரவையுண்மண்டளி | தூவாயா தொண்டு செய்வார் | சுந்தரர் தேவாரம் | #ShivamumThamizhum #ThoovainatharTemple | #Paravaiyunmandali | #Thiruvarur | #Sundarar | #Thevaaram திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேர் நிலைக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த சந்நிதியை உடைய இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் துர்வாசர் கோவில் என்று தான் அழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ தூவாய்நாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ பஞ்சின் மெல்லடியம்மை திருமுறை : ஏழாம் திருமுறை 095 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிக குரலிசை : திரு கரூர் சுவாமிநாதன் உன்னை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்" என்று உறுதி மொழி கொடுத்து சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் திருமணம் செய்து கொள்கிறார் சுந்தரர். நாட்கள் செல்ல, திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன் திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார். காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண் பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர் வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற இறைவன், "இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது கண் பார்வை கிடைக்கும்" என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும் என்பது நம்பிக்கை. 00:11 தூவாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள் காவாயா கண்டு கொண்டார் ஐவர் காக்கிலும் நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு ஆவா என் பரவையுண் மண்டளி அம்மானே. ..... (01) 03:12 பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம் தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி மின்னானே செக்கர்வானத்து இளஞாயிறு அன்னானே பரவையுண் மண்டளி அம்மானே. ..... (02) 04:39 நாமாறாது உன்னையே நல்லன சொல்லுவார் போமாறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே பேய் மாறாப் பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு ஆமாறு என் பரவையுண் மண்டளி அம்மானே. ..... (03) 07:14 நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக் காக்கின்றாய் கண்டு கொண்டார் ஐவர் காக்கினும் வாக்கு என்னும் மாலைகொண்டு உன்னை என் மனத்து ஆர்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே. ..... (04) 08:52 பஞ்சேரும் மெல் அடியாளை ஓர் பாகமாய் நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேல் என் பரவையுண் மண்டளி அம்மானே. ..... (05) 10:31 அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும் பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன் தம்மானே தண்தமிழ்நூல் புலவாணர்க்கு ஓர் அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே. ..... (06) 12:17 விண்டானே மேலையார் மேலையார் மேலாய எண்தானே எழுத்தொடு சொல்பொருள் எல்லாம் முன் கண்டானே கண்தனைக் கொண்டிட்டுக் காட்டாயே அண்டானே பரவையுண் மண்டளி அம்மானே. ..... (07) 13:47 காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்து எம் கூற்றானே கோல்வளையாளை ஓர் பாகமாய் நீற்றானே நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர் ஆற்றானே பரவையுண் மண்டளி அம்மானே. ..... (08) 15:10 செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும் கொடியேன் நான் கூறுமாறு உன் பணி கூறாத அடியேன் நான் பரவையுண் மண்டளி அம்மானே. ..... (09) 16:14 கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே. ..... (10) பதிகப் பலன் : கரந்தை, வன்னி, ஊமத்தை, கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை, அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர், மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார். ஆலய முகவரி : அருள்மிகு தூவாய் நாயனார் திருக்கோயில், கீழரத வீதி, திருவாரூர் அஞ்சல், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம், PIN - 610 001. திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் இத்தலம் இருக்கிறது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"