У нас вы можете посмотреть бесплатно திருநறையூர்ச்சித்தீச்சரம்(திருநறையூர்) | நீரும் மலரும் நிலவும் சடைமேல் | சுந்தரர் தேவாரம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
07.093 திருநறையூர்ச்சித்தீச்சரம்(திருநறையூர்) | நீரும் மலரும் நிலவும் சடைமேல் | சுந்தரர் தேவாரம் | @ShaivamumThamizhum Thirunaraiyur | Sri Siddhanatheswarar Temple | Sundarar Thevaaram | Shaivamum Thamizhum | Thevaram Padal Pettra Sthalam இத்தலத்து ஊரின் பெயர் திருநறையூர். ஆலயத்தின் பெயர் சித்தீச்சரம். கோரக்க சித்தர் என்பவர் தனக்கு ஏற்பட்ட தோல் வியாதி நீங்க இத்தலத்தில் இறைவனை வழிபட்டார். இறைவன் அவருக்கு அருள்புரிய, சித்தர் தனது நோய் நீங்கப் பெற்றார். சித்தருக்கு அருளியதால் இறைவன் பெயர் சித்தநாதேஸ்வரர் என்றும் ஆலயம் சித்தீச்சரம் என்றும் வழங்குகிறது. மேலும் மகாலட்சுமிக்கு பிறந்த ஊராக திருநறையூர் தலமும், புகுந்த வீடாக அருகில் உள்ள நாச்சியார்கோவில் வைணவத் தலமும் கருதப்படுகிறது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சித்த நாதேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சௌந்தர நாயகி திருமுறை : ஏழாம் திருமுறை 093 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிக குரலிசை : திரு கரூர் சுவாமிநாதன் நம்பியாரூரர், திருவீழிமிழலையினின்று திருவாஞ்சியம் சென்று பணிந்து பாடியபின், திருஅரிசிற்பரைப் புத்தூருக்குச் செல்லும் வழியில் திருநறையூர்ச் சித்தீச்சரத்தை வணங்கிப் பாடியருளியது இத்திருப்பதிகம். 00:12 நீரும் மலரும் நிலவும் சடைமேல் ஊரும் அரவம் உடையான் இடமாம் வாரும் அருவி மணிபொன் கொழித்துச் சேரும் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (01) 01:44 அளைப்பை அரவேர் இடையாள் அஞ்ச துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம் வளைக்கைம் மடவார் மடுவில் தடநீர்த் திளைக்கும் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (02) 02:35 இகழும் தகையோர் எயில் மூன்றும் எரித்த பகழியொடு வில் உடையோன் பதிதான் முகிழ்மென் முலையார் முகமே கமலம் திகழும் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (03) 03:48 மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால் இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம் நறக்கொள் கமலம் நனி பள்ளி எழத் திறக்கும் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (04) 04:36 முழுநீறு அணி மேனியன் மொய்குழலார் எழு நீர்மை கொள்வான் அமரும் இடமாம் கழுநீர் கமழக் கயல் சேல் உகளும் செழுநீர் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (05) 05:42 ஊனார் உடைவெண் தலை உண் பலிகொண்டு ஆனார் அடல் ஏறு அமர்வான் இடமாம் வானார் மதியம் பதி வண்பொழில்வாய்த் தேனார் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (06) 06:30 காரூர் கடலில் விடம் உண்டு அருள்செய் நீரூர் சடையன் நிலவும் இடமாம் வாரூர் முலையார் மருவும் மறுகில் தேரூர் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (07) 07:57 கரியின் உரியும் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம் புரியும் மறையோர் நிறை சொல்பொருள்கள் தெரியும் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (08) 08:57 பேணா முனிவன் பெருவேள்வி எலாம் மாணாமை செய்தான் மருவும் இடமாம் பாணார் குழலும் முழவும் விழவில் சேணார் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (09) 09:56 குறியில் வழுவாக் கொடுங்கூற்று உதைத்த எறியும் மழுவாள் படையான் இடமாம் நெறியில் வழுவா நியமத்தவர்கள் செறியும் நறையூர்ச் சித்தீச்சரமே. ..... (10) 11:01 போரார் புரம் எய் புனிதன் அமரும் சீரார் நறையூர்ச் சித்தீச்சரத்தை ஆரூரன் சொல் இவை வல்லவர்கள் ஏரார் இமையோர் உலகு எய்துவரே. ..... (11) பதிகப் பலன் : போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற, புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள், எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள். ஆலய முகவரி : அருள்மிகு சித்த நாதேஸ்வரர் திருக்கோயில், திருநறையூர், நாச்சியார்கோவில் அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், PIN - 612 102 எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருநறையூர் உள்ளது. திருநறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் உள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாச்சியார்கோவில் என்ற வைணவத்தலம் சித்த நாதேஸ்வரர் ஆலயத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"