У нас вы можете посмотреть бесплатно திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே | மாணிக்கவாசக சுவாமிகள் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
08.020 திருவாசகம் | திருப்பள்ளியெழுச்சி | போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே | மாணிக்கவாசக சுவாமிகள் | #ShivamumThamizhum #Thiruvasagam | #Thiruvembavai | #Thirupalliyezhuchi | #MargazhiFestival | #PanniruThirumurai திருப்பள்ளியெழுச்சி என்பது இவ்வாறு இறைவனை துயில் எழுப்புவதாகவும் கொள்ளலாம், நம்மில் ஆன்மிக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி பரம கருணாமூர்த்தி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் கொள்ளலாம். "சுப்ரபாதம்" என்பது இதன் இணையான சமஸ்கிருத சொல். அப்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை, குருவாக வந்து தானே வந்து ஆட்கொண்ட வள்ளலை எழுப்பி அனைத்து வளங்களையும் நலங்களையும் வழங்க பிரார்த்திப்பது போல் அமைந்த பாடல்கள் திருப்பள்ளுயெழுச்சிப் பாடல்கள். மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய பதிகங்கள் இவை. திருமுறை : எட்டாம் திருமுறை 020 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : மாணிக்கவாசக சுவாமிகள் பதிக குரலிசை : திரு வில்வம் வாசுதேவன் பக்தி இலக்கியங்களில் ஓர் அழகான, நேசவடிவான உட்பிரிவு, திருப்பள்ளியெழுச்சி. பள்ளி என்றால் படுக்கை என்பது பொருள். துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. திருமாலுக்குத் தொண்டரடிப்பொடியாழ்வாரும், சிவபெருமானுக்கு மாணிக்கவாசகரும் திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார்கள். எம்பெருமானே எங்களுக்கு சகல மங்களங்களையும் தந்து அருள்வீர்களாக என்று வேண்டும் வண்ணம் அமைந்தவையே இந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள். மார்கழி மாதம் திருவெம்பாவையுடன் இப்பதிகங்களும் திருக்கோவில்களில் பாராயணம் செய்யப்படுகின்றன. போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு நின் திருவடி தொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடையாய் எமை உடையாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (10) அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக் கடிமலர் மலர மற்று அண்ணல் அம்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி எழுந்தருளாயே. ..... (02) கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய். எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (03) இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (04) பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரை சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (05) பப்பற வீட்டு இருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்து அறுத்தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா செப்புறு கமலங்கள் மலரும் தண்வயல்சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (06) அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருஉரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டு கொண்டு இங்கு எழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தரகோச மங்கை உள்ளாய் திருப்பெருந்துறை மன்னா எது எமைப் பணி கொளுமாறு அது கேட்போம் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (07) முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார் பந்தணை விரலியும் நீயும் நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே செந்தழல் புரை திருமேனியும் காட்டி திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே. ..... (08) விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழி அடியோம் கண் அகத்தே நின்று களிதரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் எண் அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ..... (09) புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம் அவன் விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே. ..... (10) 08.007 திருவாசகம் | திருவெம்பாவை | ஆதியும் அந்தமும் இல்லா • திருவாசகம் | திருவெம்பாவை | ஆதியும் அந்தமு... குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"