У нас вы можете посмотреть бесплатно ஆண்டவர் பங்காகவே,(கீர்த்தனை - 230) Aandavar pangagave или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
D major 3/4 175bpm michaelsamraj@gmail.com நண்பர்களே! நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள் மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது. சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன். பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன். கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள். தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். W.Michael Samraj பல்லவி ஆண்டவர் பங்காகவே, தசம பாகம், அன்பர்களே, தாரும்;-அதால் வரும் இன்பந்தனைப் பாரும். அனுபல்லவி வான்பல கணிகளைத் திறந்தாசீர் வாதங்கள் இடங்கொள்ளாமற் போகுமட்டும் நான் தருவேன், பரிசோதியுங்களென்று ராஜாதிராஜ சம்பூரணர் சொல்வதால். - ஆண்டவர் சரணங்கள் 1. வேதாளராஜன் அருஞ்சிறை மீட்டாளும் விண்ணவர் கோமானே-அந்த மேதகத்தை[1] நன்றி ஞாபகஞ் செய்திட விதித்தது தானே, வேதனம்[2] வியாபாரம், காலி, பறவையில், வேளாண்மை, கைத்தொழில், வேறு வழிகளில், ஊதியமாகும் எதிலும் அவர் பாகம் உத்தமமாகப் பிரதிஷ்டை பண்ணியே. - ஆண்டவர் 2. ஆலயங் கட்ட, அருச்சனை செய்ய, அதற்குளதைப் பேண,-தேவ ஊழியரைத் தாங்கி உன்னத போதனை ஓதும் நன்மை காண, ஏழைகள், கைம்பெண்கள், அனாதைப் பாலகர்கள், ஏதுகரமற்ற ஊனர், பிணியாளர், சாலவறிவு நாகரீக மற்றவர் தக்க துணைபெற்றுத் துக்கமகன்றிட - ஆண்டவர் 3. நம்மைப் படைத்துச் சுகம் பெலன் செல்வங்கள் யாவும் நமக்கீந்து,-நல்ல இம்மானுவே லென்றொரு மகனைத் தந்து இவ்வா றன்புகூர்ந்து, நன்மை புரிந்த பிதாவைக் கனம்பண்ண நம்மையும் நம்முட யாவைய மீந்தாலும் சம்மததே அதிலும் தசம பாகம் தாவென்று கேட்கிறார்; மாவிந்தை யல்லவோ? - ஆண்டவர் ஜி.சே. வேதநாயகம் [1] மேன்மை [2] சம்பளம்